Cart

Shop

ஞாலம்

ஞாலம்

நீண்ட சரித்திரத்தின் ஒரு துளி... வரலாற்றின் பக்கங்களை நாவல்களாக மாற்றுகிற புனைவுப் பித்து எனக்கு உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் கதையை, 'வெட்டுப்புலி' ஆக்கினேன். ஆண்பால் பெண்பால்' என்றேன். 'வனசாட்சி' என்றும் சொல்லிப் பார்த்தேன். மூன்று நாவல்களும் பேசியது அந்த ஒரு நூற்றாண்டின் கதையைத்தான். இது 19 ஆம் நூற்றாணடின் கதை. நியாயம் கேட்டுப் போராடிய ஓர் உண்மை மனிதனின் கதை. 19ஆம் நூற்றாண்டின் முழு நீளத்திற்கும் வாழ்ந்த மனிதர். அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றி இருந்த ஒரு மைல் தூரத்தில்தான் அன்றைய சென்னைப் பட்டணத்தின் அந்தனை மாற்றங்களும் நிகழ்ந்தன. பெரியாரும் அண்ணாவும் பாவேந்தர் பாரதிதாசனும் பன்மொழிப் புலவர் அ.கி.பரந்தாமனாரும் பெரியார் தொண்டர் ஆனைமுத்து ஐயாவும் பேராசிரியர் வீ.அரசுவும் இன்னும் பலரும் போற்றிய ஒரு மாமனிதனின் கதை இது. வரலாற்றுப் பிழையாய் வஞ்சிக்கப்பட்ட விவாயிகளின் கதை. நிலத்தின் கதை.
335.00
தூத்துக்குடி
தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி சங்ககாலத்தில் இருந்தே முத்துக்குளித்துறை. தூத்துக்கும் மட்டுமன்று. வடக்கே வேம்பாறு தொடங்கித் தென்னெல்லையாய்க் குமரி வரை வழிநெடுக பாண்டிய நாட்டு முத்துக்குளித்துறைகளே. கொற்கைத்துறைமுகம் வழியாக வளமாக வணிகமும் கொழித்த நிலம். பின்னாளில் பொருநையாற்றின் நீர்ப்போக்கு மாறி கொற்கை மணற்பகுதியானதும், புன்னைக்காயல் துறைமுகப்பட்டனமானது. காலப்போக்கில் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களால், பட்டியாக இருந்த தூத்துக்கும வளர்ந்து பேரூரானது வரலாறு. அந்த வரலாற்றின் செம்பாகமான நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பே இந்தப் புத்தகம்.
300.00
மேன்ஷன்
மேன்ஷன்

மேன்ஷன்

மேன்ஷன் என்ற என்னுடைய இந்த நாவல், எனது அனுபவம் என்பதைக் காட்டிலும் சக மனிதர்களின் வலி,ஏக்கம்,துரித சந்தோஷம் என சொல்லிவிடலாம். மேன்ஷனில் உடன் தங்கியிருந்தவர்கள் ஹக்கம் தொலைத்து உழன்ற இரவுகளின் பதிவு... நாவலின் ஓட்டத்திற்காக சில மாறுதல்களை செய்துள்ளேன்... உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், உறவுகள் இருந்தும் வாழ்வின் திசை தெரியாமல் தவிப்பவர்கள் காலத்தை சபித்துக்கொண்டே நாட்களை அதன் போக்கில் சிரமப்பட்டு நகர்த்துவது சென்னை மட்டுமல்ல... வேறெந்த ஊர்களாக இருந்தாலும் அங்கிருக்கும் மேன்ஷன்களிலோ அல்லது வேறு தங்கும் விடுதிகளிலோ நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த நாவலில் இடம்பெற்ற மேன்ஷனும் அவற்றில் ஒன்றுதான்...அறைகளில் விம்மியவர்களின் உள்ளத்தில் இருந்து வெளியேறி சுவர்களில் மோதி எதிரொலித்த நாட்களே இந்த மேன்ஷன் நாவலாக உங்கள் கைகளில்..
250.00