சங்கர் முதல் ஷங்கர் வரை
டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக…. இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் … ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி? அவரே சொன்ன வாழ்க்கை அவருடைய அனுபவத்தின் தொகுப்பு இது.
₹150.00
நரியாட்டம்
தமிழரின் விறுவிறுப்பான சல்லிக்கட்டைப் போன்றே, வட தமிழகத்தில் எருதாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வந்த 'வங்கா நரி சல்லிக்கட்டும் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாக்களில் ஒன்று.
தமிழகம் முழுவதும் வனப்பகுதி ஒட்டிய மேய்ச்சல் நிலங்கள், குறுங்கரடுகள், வயல்வெளிகள் என விவசாய நிலங்களோடு ஒட்டி வாழ்ந்து வந்த நரிகள் இன்று காணாமல் போய்விட்டன. இதற்கு வங்க நரியை குலதெய்வமாக வழிபடும் 'நரி விடுகிற' மக்களின் கலாச்சாரம் மட்டுமே காரணமில்லை. நவீன முறைகளுக்குத் தள்ளப்பட்டு இன அழிவை ஏற்படுத்தியிருக்கும் நாம்தான் காரணம். காக்கத் தவறிய வனத்துறை முதலிய அரசுத் துறைகளுக்கும் இதில் பெரும் பங்குண்டு. விளிம்பு நிலையில் இருக்கும் உயிரினங்களை மீட்க அக்கறையான மொழியில் எச்சரித்திருக்கிறார் சீசரித்திருக்கிறார் எழுத்தாளர் நவி.
நான் ரம்யாவாக இருக்கிறேன்
‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் பிரபஞ்சக் கோட்பாடு. இதைப்போல மண்ணும் மனிதர்களும் உள்ள இன்னொரு பூமியும் இருக்கிறது என்றுகூடச் சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் ஒருவரைப் போலவே அங்கும் ஒருவர் இருப்பார். அவர்களை நாமோ நம்மை அவர்களோ சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது என்கிறார்கள். நாம் ரம்யாவாக இருக்கிறேன் அதற்கான சுவாரஸ்யங்களை ஆராயும் நாவல், சயின்ஸ் த்ரில்லர்
₹200.00
மானுடப்பண்ணை
அதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை என்பது இந்த நாவலை இப்போது படிக்கும்போது தோன்றுகிறது.
₹200.00