சங்கர் முதல் ஷங்கர் வரை
டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக…. இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் … ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி? அவரே சொன்ன வாழ்க்கை அவருடைய அனுபவத்தின் தொகுப்பு இது.
₹150.00
ஞாலம்
நீண்ட சரித்திரத்தின் ஒரு துளி...
வரலாற்றின் பக்கங்களை நாவல்களாக மாற்றுகிற புனைவுப் பித்து எனக்கு உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் கதையை, 'வெட்டுப்புலி' ஆக்கினேன். ஆண்பால் பெண்பால்' என்றேன். 'வனசாட்சி' என்றும் சொல்லிப் பார்த்தேன். மூன்று நாவல்களும் பேசியது அந்த ஒரு நூற்றாண்டின் கதையைத்தான்.
இது 19 ஆம் நூற்றாணடின் கதை. நியாயம் கேட்டுப் போராடிய ஓர் உண்மை மனிதனின் கதை. 19ஆம் நூற்றாண்டின் முழு நீளத்திற்கும் வாழ்ந்த மனிதர். அவர் வாழ்ந்த வீட்டைச் சுற்றி இருந்த ஒரு மைல் தூரத்தில்தான் அன்றைய சென்னைப் பட்டணத்தின் அந்தனை மாற்றங்களும் நிகழ்ந்தன.
பெரியாரும் அண்ணாவும் பாவேந்தர் பாரதிதாசனும் பன்மொழிப் புலவர் அ.கி.பரந்தாமனாரும் பெரியார் தொண்டர் ஆனைமுத்து ஐயாவும் பேராசிரியர் வீ.அரசுவும் இன்னும் பலரும் போற்றிய ஒரு மாமனிதனின் கதை இது. வரலாற்றுப் பிழையாய் வஞ்சிக்கப்பட்ட விவாயிகளின் கதை. நிலத்தின் கதை.
₹335.00
தூத்துக்குடி
தூத்துக்குடி சங்ககாலத்தில் இருந்தே முத்துக்குளித்துறை. தூத்துக்கும் மட்டுமன்று. வடக்கே வேம்பாறு தொடங்கித் தென்னெல்லையாய்க் குமரி வரை வழிநெடுக பாண்டிய நாட்டு முத்துக்குளித்துறைகளே. கொற்கைத்துறைமுகம் வழியாக வளமாக வணிகமும் கொழித்த நிலம். பின்னாளில் பொருநையாற்றின் நீர்ப்போக்கு மாறி கொற்கை மணற்பகுதியானதும், புன்னைக்காயல் துறைமுகப்பட்டனமானது. காலப்போக்கில் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களால், பட்டியாக இருந்த தூத்துக்கும வளர்ந்து பேரூரானது வரலாறு. அந்த வரலாற்றின் செம்பாகமான நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பே இந்தப் புத்தகம்.
₹300.00