மழையா பெய்கிறது

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை. ரூ.95/-

எனதருமை டால்ஸ்டாய்

எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம் என்ற மகத்தான நதிதான் மனித மனங்கள் வெறுப்பாலும் வன்முறையாலும் உருவாக்கும் தடையரண்களை உடைத்து வாழ்வின் மகத்தான பிரவாகத்தை எங்கெங்கும் கொண்டு செல்கிறது. மாபெரும் இலக்கியப் படைப்புகள் உலகம் முழுவதும் தமது வெளிச்சத்தை, காலத்தையும் இடத்தையும் தாண்டி எங்கும் பரவச் செய்துகொண்டிருக்கிறது. அந்த நதியின் தண்ணீரைக் கையளவு எடுத்து, அந்த வெளிச்சத்தின் பிரகாசத்தை ஒரு சுடரளவு ஏற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் முயற்சிதான் இந்தக் கட்டரைகள். எஸ்.ராமகிருஷ்ணன் டால்ஸ்டாய் துவங்கி தாகூர் வரை தனக்கு விருப்பமான ஆளுமைகளை அவர்களது படைப்பு மற்றும் செயல்பாடுகளின் வழியே அறிமுகம் செய்து வைக்கிறார். ரூ.100/-

தாழப்பறக்காத பரத்தையர் கொடி

பிரபஞ்சன் பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பிரபஞ்சனின் நுட்பமான மனதினையும் பன்முக ஆளுமையினையும் வெளிப்படுத்துகின்றன. தனது அற்புதமான மொழிநடையால் தான் எழுதுகிற எந்தப் பதிவையும் ஒரு வசீகரமான படைப்பாக மாற்றிவிடும் பிரபஞ்சனின் ஆற்றலுக்கு இந்த நூல் ஒரு உதாரணம். ரூ.85/-

கனவுகளின் நடனம்

சாரு நிவேதிதா இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது. சாரு நிவேதிதா (முன்னுரையிலிருந்து) ரூ.110/-

கனவுகளின் நடனம்

சாரு நிவேதிதா இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது. சாரு நிவேதிதா (முன்னுரையிலிருந்து) ரூ.110/-

கலையும் காமமும்

சாரு நிவேதிதா சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிப்ராயங்களை, பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டவையிலிருந்தே உருவாக்கப்படுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மனநிலைக்கு ஒரு நிரூபணம். ரூ.100/-

கடவுளும் சைத்தானும்

சாரு நிவேதிதா சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பீடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன. ரூ.85/-

கற்றனைத்தூறும்:கல்வி குறித்த பதிவுகள்

ரவிக்குமார் கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்முடைய கலாச்சார சமூக நிறுவனங்களுக்குத் தேவையான உடல்களையும் மனங்களையும் உற்பத்தி செய்யும் நமது கல்வி அமைப்பின் பல்வேறு முரண்களையும் எதிர்மறை அம்சங்களையும் ரவிக்குமார் இந்த நூலில் தீவிரமாக விவாதிக்கிறார். சீரான, சமூக நீதியுள்ள கல்வி அமைப்பை உருவாக்குவதில் நம்பிகை கொண்டவர்களோடு இந்த நூல் ஆழமாக உரையாடுகிறது. ரூ.85/-

என்றும் சுஜாதா

எஸ். ராமகிருஷ்ணன் இந்த புத்தகம் Sujatha Reader அல்ல. இது சுஜாதாவின் பன்முகத்தன்மை என நான் எதைக் கருகிறேன் என்பதற்கான தொகைநூல். சுஜாதா என்ற எழுத்து ஆளுமையின் பரந்துபட்ட விருப்பங்கள், ஈடுபாடுகள், அக்கறைகளையே நான் முதன்மைப்படுத்தியிருக்கிறேன். ஆகவே இது சுஜாதா படைப்புலகின் ஒரு குறுக்குவெட்டுப்பார்வை போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. எஸ்.ராமகிருஷ்ணன் ரூ.225/-

வேறு வேறு உலகங்கள்

அ. ராமசாமி தமிழ்ச் சமூக எதார்த்தத்தைத் தொடர்ந்து பரிசீலனைக்கு ஆளாக்குபவை அ.ராமசாமியின் கட்டுரைகள். ஊடக நுண் அரசியல், வெகுசன அரசியல் பண்பாடு, மதிப்பீடு சார்ந்த குழப்பங்கள் என நமது காலகட்டத்தின் மையமான நெருக்கடிகள் குறித்த தீவிரமான கேள்விகளை இக்கட்டுரைகள் எழுப்புகின்றன. வெளிப்படையாக வேறுபட்டதாகத் தோன்றும் பிரச்சினைகளுக்கு இடையே இருக்கும் உள்ளார்ந்த தொடர்புகளை அ.ராமசாமி தனது எழுத்துகளின் வழியே இனம்காண முற்படுவதன் விளைவே இந்த நூல். ரூ.75/-