Description
பொன். செந்தில்குமார்
நஞ்சையும் புஞ்சையும் செழித்து விளைந்த மண்ணில் இன்றைக்கு கான்கிரீட் விளைச்சலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும்! விவசாயப் பரப்புகள் வெகு வேகமாகக் குறைந்துவரும் இன்றையக் காலகட்டத்தில் விவசாய ஜீவன்களுக்குக் கைகொடுக்கும் விதமாக அரசு நிறைய திட்டங்களை அறிவித்து வருகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் கடமையாக இதுகுறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அரசு சார்பாக, பயிர்க் கடன், அறுவடைக் கடன், கிணறு வெட்டக் கடன், கால்நடை வளர்க்கக் கடன், மானியங்கள் இப்படி ஏராளமான வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள், இந்தக் கடனை எப்படிப் பெறலாம், யாரிடம் பெறலாம் எனத் தெரியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வழிகாட்டும் விதமாக, பசுமை விகடன் இதழ்களில் தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டி!’ எந்தெந்தப் பயிர்களுக்குக் கடன் தரப்படுகிறது, எவ்வளவு மானியம் தரப்படுகிறது, எந்த வங்கியை அணுக வேண்டும், யாரிடம் தொடர்புகொள்ள வேண்டும்… என்பன போன்ற அனைத்துத் தகவல்களையும் ஒன்றுவிடாமல் சேகரித்து எழுதி இருக்கிறார் பொன்.செந்தில்குமார். ஊருக்கெல்லாம் சோறுபோடும் விவசாயிகளுக்கு, அவர்களின் ஏக்கத்தைப் போக்கி, அலைச்சலை மிச்சப்படுத்தி, மேன்மேலும் விவசாயத் தொழிலில் மேன்மை அடைய இந்த நூல் நிச்சயம் துணைபுரியும்!
ரூ.100/-
Reviews
There are no reviews yet.