Description
யாழன் ஆதி
எப்படிப் பார்த்தாலும் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலும் கூட தீண்டாமைக் கொடுமையின் ஒரு கோரமான வெளிப்பாடே ஆகும்.எரியும் சாதி வெறித் தீயை அணைப்பதற்குப் பதிலாக,பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையில் சில சாதி அமைப்புகள் கூடி சில தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது.எனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது முதல் தீர்மானம்.ஆனால்,நிலைமை நேர்மாறாக உள்ளது.பல மாவட்டங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை,ஆலயத்திற்குள் தலித் மக்கள் செல்லத் தடை,சாதி இந்துத் தெருக்களில் தலித் மக்கள் காலணி அணிந்து செல்லத் தடை,சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு,மீறி நடந்தால் கௌரவக் கொலை.இத்தனைக்குப் பிறகும் தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறும் இந்தத் தீர்மானம் தீண்டாமைக் கொடுமையை நியாப்படுத்தவே வழிவகுக்கும்….
ரூ.60/-
Reviews
There are no reviews yet.