Description
எம். வேதசகாயகுமார்
புதுமைப்பித்தனுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழில் சிறுகதை எழுதியவர்கள் உண்டு. எனினும், உலக இலக்கியத்தின் தரத்துக்கு இணையாக உயர்ந்து நிற்கும் சிறுகதைகளைப் படைத்தளித்தவர் புதுமைப்பித்தனே ஆவார். இக்கூற்று புகழுரை அன்று. எக்காலத்திலும் எவரும் பெருமிதத்தோடு நினைவுகூர வேண்டுமென்பதற்கு அடையாளமே இந்த நூல் என்பேன். இது வெறும் சிறுகதைத் தொகுப்பு அன்று; தமிழ் இலக்கியக் கரும்பின் நடுக்கணு. தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்தால் கொள்ள முடியாத இலக்கியத் கருவூலம். இங்கே இருந்துதான் புதிய தமிழ் இலக்கியம் வீறுடன் பிறந்த மேனியோடு நாபிக்கொடியை இழுத்துத் தோள்மீது போட்டுக்கொண்டு சமூகத்தின் மீது கசையடி கொடுக்கும் போரினைத் தொடங்குகிறது. காவியத்துக்கு ஒரு கம்பன், கவிதைக்கு ஒரு பாரதி எனின், சிறுகதைக்கு ஒரு புதுமைப்பித்தன் என்று தமிழ் இலக்கிய சாம்ராஜ்யத்தில் பறை கொட்டிச் சொல்லுகின்ற படைப்புகளின் தொகுதி இது.
ரூ.400/-
Reviews
There are no reviews yet.