Description
புறாபாண்டி
வாய்க்கு ருசியாக உணவைத் தயாரிப்பதற்குள் ஆயிரம் சந்தேகங்கள் ஏற்படுகின்றன. அந்த சந்தேகங்களை சமையல் நிபுணர்கள் தீர்த்துவைக்கின்றனர். சரி, அந்த உணவுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடும்போதும், நெல் நடவின்போதும் எத்தனை சந்தேகங்கள், கேள்விகள் எழும்..? வேளாண்மை, மீன்வளம், கால்நடை, கூட்டுப் பண்ணை, செலவில்லாத தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் வாசகர்களின் கேள்விகளுக்கு, அனுபவம் வாய்ந்த விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் என்று பலரிடமிருந்து ஆதாரபூர்வமான, தெளிவான பதில்களைப் பெற்று ‘பசுமை விகடன்’ இதழ்களில் தொகுத்து வருகிறார் புறா பாண்டி (பொன்.செந்தில்குமார்). மேலும், தகவல்களைப் பெற வசதியாக பதில் சொன்னவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களும் கூடியவரை சேர்த்துத் தருகிறார். இப்படி, ‘பசுமை விகடன்’ இதழ்களில் வெளியாகி வரும் ‘நீங்கள் கேட்டவை!’ கேள்வி_பதில்களின் தொகுப்பு முதல் பாகமாக ஏற்கெனவே நூல் வடிவில் வெளி வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இந்த இரண்டாம் பாகம். ‘தேனீக்கள் தோட்டத்தில் மொய்த்தால் மகசூல் உயரும், விளைச்சல் அமோகமாக இருக்கும்’ போன்ற பல சுவைய
ரூ.70/-
Reviews
There are no reviews yet.