Description
எஸ்.கணேச சர்மா
நடமாடும் தெய்வத் திருஉருவாக நம்மிடம் வாழ்ந்த காஞ்சி மகா பெரியவர் ஓர் ஆன்மிகப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து அருள் பாலித்தவர். பக்தர்களுக்கு நன்னெறி போதித்து அவர்களை நல்வழியில் அழைத்துச் சென்ற வள்ளல் பெருமான். அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தவர் மகா பெரியவர். மெய்ஞானம் அவருக்குத் தெரியும். விஞ்ஞானம் அவர் விரல் நுனியில். அணு ஆயுதங்கள் பற்றி பேசுவார். மருத்துவம் பற்றி அலசுவார். சாஸ்திரங்களை கரைத்துக் குடித்திருந்த அவருக்கு சங்கீத லட்சணங்களும், லட்சியங்களும் பூரணமாக தெரிந்திருந்தது. மகா பெரியவரின் தரிசனத்துக்காக செல்லும் சங்கீத வித்வான்கள் பலரும் அவர் சந்நிதானத்தில் பாடுவதையும், இசைப்பதையும் பெரும் பேறாகக் கருதுவார்கள். தங்களுக்குத் தெரியாத இசை நுணுக்கங்கள் பலவற்றையும் கற்றுக் கொண்டு பரவசப்படுவார்கள். எஸ்.கணேச சர்மா எழுதியிருக்கும் இந்த நூல், மகா பெரியவரின் இசைப் புலமையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளுக்கு பல்வேறு சந்தர்பங்களில் மகா பெரியவர் அளித்த துல்லியமான விளக்கங்களை பதிவு செய்கிறது. உதாரணமாக, காம்போதி ராகத்தில் அமைந்த ‘ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்த
ரூ.60/-
Reviews
There are no reviews yet.