மிதவை

மிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது… பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி… – நாஞ்சில் நாடன் ரூ.120/-

ஆகாயத் தாமரை

அசோகமித்திரன் ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி. அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்று விடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதிதான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது. சா.கந்தசாமி ரூ. 140/-

இன்று

மனிதச் சிந்தனைக்கு டால்ஸ்டாய் அளித்த மிக முக்கியமான செய்தி வாழ்க்கை ஏற்பு & வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதின் அடிப்படையில் வாழ்க்கையை ஆராய்வது. ஆனால் வாழ்க்கை என்பது ஜடத்தன்மை கொண்டதல்ல. ரூ.75/-

நினைவுப் பாதை

நகுலன் ஸ்தூலமான கதையும் இல்லை. ஸ்தூலமான கருத்தோட்டமும் இல்லை. இந்த இரண்டுவிதமான பாதுகாப்புகளும் இல்லாமல் நாவல் எழுத முடியுமா? அப்படி எழுதினாலும் உணர்வுபூர்வமான மனநிறைவு அளிக்கும்படி எழுதமுடியுமா? ரூ.190/-

தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்

திரைப்பட இயக்குநர் பாலா எழுதிய  ‘இவன்தான் பாலா’ என்று ‘ஆனந்த விகடன்’ வெளியிட்ட தொடரிலும் நூலிலும் இந்தத் தொகுப்பின் கதையான ‘இடலாக்குடி ராசா’வைக் குறிப்பிட்டு  அந்தக் கதைதான் தனது சினிமா நுழைவுக்கான காரணம் என்று நன்றியுடன் குறிப்பிட்டபின், இந்த முதல் தொகுப்புக்கான தேடல் இருந்தது. ஆனால், தொகுப்பு பதிப்பில் இல்லை. 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு கதாசிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு மறுபதிப்பு வருவதென்பதும், அது அவன் வாழும் காலத்தில் நடக்கிறது என்பதும், அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் கலவையான உணர்ச்சிகளைத் தருகின்றது. – நாஞ்சில் நாடன் ரூ.90/-

திருச்செங்கோடு

கையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது. மலையின் சரிவு முழுக்க மரங்கள். எந்த மரம் அந்த வேங்கை? சரிவின் கோடியில் பூக்களால் பொலி யும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள்? முகம் பளிச்சிட்டுத் தெரிகிறது. இவளேதான். இவளே தான்… ரூ.125/-

தொலைந்துபோனவர்கள்

பணக்காரன், ஏழை, குட்டையன், நெட்டையன், கறுப்பன், சிவப்பன், புத்திசாலி, மண்டு எல்லோரும் சேர்ந்ததுதான் பள்ளி. பள்ளி செல்லும் வயதில் இந்த வித்தியாசங்கள் இருந்தாலும், எப்படியோ ஓர் ஒருமையையும் உணர முடிகிறது. எல்லோருடனும் சேர்ந்து விளையாட முடிகிறது, சண்டை போட முடிகிறது. கேலி செய்ய முடிகிறது, கனவிலும் நனவிலும் நண்பர்களையே நினைத்துக்கொண்டிருக்க முடிகிறது. – சா.கந்தசாமி ரூ.150/-

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

தமிழ் இலக்கிய ஆய்வுகள், பரவச மொழிதலாகவும் உயர்வு நவிற்சியாகவுமே பல காலம் இருந்து வந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக ஆய்வுகள் புதிய திசையில் நடைபெறத் தொடங்கியுள்ளன. புனைவாகிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆய்வுகள் மற்றொரு புனைவாகவே இருந்த நிலைமாறி, கல்வெட்டுகள், செப்பேடுகள் துணைகொண்டும் மானுட இயல் முதலான பல புதிய துறை அறிவு கொண்டும் புதிய சொல்லாடலைக் கட்டமைத்துள்ளன. தமிழ் ஆய்வைப் புதிய தடத்தில் செலுத்திய முன்னோடிகளைப் பின்பற்றி, பிரபஞ்சன் ஆதித் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. ரூ.130/-

ஊமைச்செந்நாய்

ஜெயமோகனின் சிறுகதை. ஆதிக்க மனோபாவம் கொண்ட ஒருவனிடம் அடிமையாய் கிடக்கும் மனிதனின் செயல்பாடுகளை, மனநிலையைச் சித்திரிக்கும் சிறுகதை. ரூ.160/-

வாக்குமூலம்

வாக்குமூலம் நாவலைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. என் நாவல்களைப் பற்றி பரவலான ஓர் அபிப்பிராயம்,  என் எல்லா நாவல்களும் ஒரே அனுபவ உலகின் பல்வேறு உருவங்கள் என்று. ஆனால் இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உருவச் சிறப்பினால் அடிப்-படையான அனுபவத்திற்குக்கூட நுணுக்கமும் பரிமாணமும் ஆழமும் கூடுகின்றன என்பது தெளிவு. இந்த நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம், என் மற்ற நாவல்களிலிருந்து உருவ வேறுபாடும் பாத்திரங்களில் ஏபிள் தாம்ப்ஸன், மோஸஸ் என்ற பாத்திரங்களும். ரூ.75/-