சொல்முகம்

என் உரைகள் எல்லாமே முன்னரே தெளி-வாகக் கட்டுரை வடிவில் எழுதப்பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அந்தக் குறிப்புகளை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன். ஆனால் நான் ஒருபோதும் குறிப்புகளைப் பார்த்து வாசித்ததில்லை. எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்-போவதென்ன என்பது முன்னரே தெளிவாகி-விடுகிறது. நம் உரைக்கு தொடக்கம், முடிவு, உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்–கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். ரூ.170/-

நாளும் பொழுதும்

நாளும் பொழுதும்’ நூலில் நான் புழங்கும் மூன்று தளங்களைச் சேர்ந்த கட்டுரைகள் உள்ளன. ஒன்று என் அந்தரங்க வாழ்க்கை. இன்னொன்று திரையுலகம். மூன்றாவது நான் வாழும் சூழல். அனுபவங்களில் இருந்து ஒரு மேலெழல் நிகழ்ந்த குறிப்புகளை மட்டுமே இங்கே சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே வாழ்விலே ஒருமுறை, நிகழ்தல் போன்ற தொகுதிகளில் என் இத்தகைய எழுத்து-கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை வாசகர்-களுக்கு மிக நெருக்கமானவையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஏனென்றால் இவை உண்மை-யான அனுபவங்கள் என்ற பிரக்ஞை இவற்றுக்கு வாசகரின் நம்பகத்தை உருவாக்கித் தருகிறது. அந்த உண்மையனுபவத்தில் இருந்து எழும் ஓர் உணர்ச்சி அல்லது தரிசனம் வாசகன் எளிதில் தொட்டறியக் கூடியதாக உள்ளது. சிறந்த புனைவுத் தருணங்கள் அளவுக்கு இந்த அனுபவத் தருணங்களும் கலைத்-தன்மையை அடைவது இப்படித்தான். ரூ.120/-

சார்வாகன் கதைகள்

இப்போது, நான் எழுதியிருப்பவற்றையெல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது ‘அட, நான் இத்தனை எழுதியிருக்கிறேனா?’ என்ற மலைப்புடன் கூடிய மகிழ்ச்சி. நான் உண்மையாக ‘எழுத்தாளன்’ என்றிருந்தால் இதைப் -போலக் குறைந்தபட்சம் நாலைந்து மடங்காவது எழுதிக் -குவித்திருக்கவேண்டும், என் கை விரல்கள் மரத்து மடங்கி-விட வில்லையே! ஆகவே இன்னமும் எழுதிக்கொண்டிருக்கவும் வேண்டும். இரண்டும் நேரவில்லை. நான் அவ்வப்போது ஏதேதோ எழுதியிருந்தாலும் எப்போதும் என்னை ஒரு ‘எழுத்தாள’னாகக் கருதிக்கொண்டதில்லை. இப்போதும் கருதிக்-கொள்ளவில்லை.வானத்தில் என்றோ ஒருநாள் தோன்றிச் சில நாள் இருந்து மறையும் வால்நட்சத்திரம் போன்ற விசித்திரப்பிறவி என்று தான் நான் நினைத்தேன். எனவேதான் போலும், “இது என் குழந்தை!” என்று நான் மார்தட்டித் திரியவுமில்லை. அப்படித் திரியவேண்டும் என்று தோன்றவுமில்லை. – சார்வாகன் ரூ.400/-

சினிமா பாரடைஸோ

சினிமா பாரடைஸோ படம் பார்ப்பதற்குத் தரும் அதே சுவாரஸ்யத்தை அந்தப் படத்தின் திரைக்கதை வசனமும் தருகிறது. பொதுவாகத் திரைக்கதை வசனத்தைப் படத்தின் கதாசிரியர்தான் எழுதுவார். பின்னர் அது பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். ஆனால் இது மொழிபெயர்ப்புப் புத்தகமல்ல. படத்தை டிவிடியில் பலமுறை பார்த்து நேரடியாகத் தமிழில் அதன் திரைக்கதை வசனத்தைத் தந்திருக்கிறார் யுகன். இது ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பதைவிடக் கடினமானது. யுகன் நிறைய காலம் உழைத்து இப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். சினிமா பாரடைஸோ ஏற்கனவே எல்லோராலும் மிகவும் விரும்பப்பட்ட படமாதலால் சரளமாக எவ்வித நெருடலுமின்றி எழுதப்பட்டிருக்கும் அதன் திரைக்கதை வசனமும் நல்ல வரவேற்பினைப் பெறும். – அம்ஷன் குமார், திரைப்பட இயக்குநர் ரூ.95/-

நீலம்

பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல்நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்துவைத்திருக் கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச்செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்கவைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது. – ஜெயமோகன் ரூ.250/-

அவன் ஆனது

‘அவன் ஆனது’ நாவல் தொடங்கப்பட்டது போலவே அழகாக முடிந்தும் இருக்கிறது. நாவலின் கடைசிப் பகுதியில் நாவல் முற்றிலும் மறைந்துவிடுகிறது. அங்கே நாவல் பாத்திரங்கள் ஒருவரும் இல்லை. சாவகாசமாக மழைதான் பெய்கிறது. அந்த மழையின் அசந்தர்ப்பத்தில் கூட ஓர் அர்த்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. சா. கந்தசாமிக்கு முன்னுரையும் வேண்டாம்; மதிப்புரையும் வேண்டாம். அவர் பெயர் போட்டிருந்தால் உடனே அதைப் படிக்கக் கிடைத்த பொக்கிஷமாக எடுத்துக் கொள்ளலாம். காரணம் அவர் மேதைமை, நேர்த்தியைத் தவிர வேறெதையும் தந்ததும் கிடையாது; ஏற்றதும் கிடையாது. – ஞானக்கூத்தன் ரூ.170/-

ஆட்கொல்லி

க.நா.சு.   ஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்-காக அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி.என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும் அழகாக ரேடியோவில் வார-வாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது-. என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண விசேஷங்களில் பாதி-யாவது அவர் காரணமாக வந்தவைதான். இள-வயதில் அவர் வீட்டில் வளர்ந்தவன் நான். ரூ.70/-

1984

ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார். ஜார்ஜ் ஆர்வெல் தமிழில்: க.நா.சு ரூ.210/-

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

கடந்த பத்தாண்டுகளில் வந்த மலையாளச் சினிமாக்களில் பெரிதும் பேசப்பட்ட திரைப்படங்களில் சிலவற்றை அவற்றின் அரசியல் / கலாச்சாரப் பின்புலத்தோடு பேச முயல்கிறது இந்தக் கட்டுரைகள். அந்தரத்தில் வைத்தே ஒன்றை மதிப்பிடுவது ‘நம் வழமை’ மாறாக, அதன் வேரென்ன? விழுதென்ன? எங்கிருந்து திரள்கிறது அக்கலை? எவற்றின் நீட்சி அவை? அதன் தொடர்ச்சி எவை? என உரைநடையிலிருந்து விலகிய வேறொரு மொழியில் பேசுகின்றன இக்கட்டுரைகள். -சாம்ராஜ்

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்

யுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்து ரசித்த சில படங்களைத் தமிழ்நிலம் ரசிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஆகிய படங்களின் திரைக்கதைவசனத்தை தமிழுக்குத் தந்தார். இப்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைத் தருகிறார். ரூ.140/- – பிரபஞ்சன்