சர் ஐசக் நியூட்டன்

வெ. சாமிநாத சர்மா 1642ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்25ஆம் தேதி பிறந்து1727ஆம் ஆண்டு மார்ச் மாதம்20ஆம் தேதி மறைந்த சர்.ஐசக் நியூட்டனின் வாழ்க்கைக் கதையின் சில பக்கங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் புத்தகம்.நியூட்டனின் சுவையான செய்திகளை உள்ளடக்கிய இப்புத்தகம் இளம் வாசகர் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப் படவேண்டிய ஒன்று. ரூ.15/-

தாமஸ் ஆல்வா எடிசன்

வெ. சாமிநாத சர்மா “கி.பி.1492இல் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டான்.அதன் பிறகு ஐரோப்பா அங்கு போனது.லட்சக்கணக்கான சுதேசிகளைக் கொன்று அவர்களுடைய எலும்புக் கூடுகளின் மீதுதான் ஐரோப்பிய ஆதிக்கம் என்கிற கட்டடம் அமைக்கப்பட்டது.அப்படி அங்கு குடிபோன ஒரு குடும்பத்தின் வாரிசுதான் தாமஸ் ஆல்வா எடிசன் என்று துவங்கும் இப்புத்தகம் எடிசனின் வாழ்க்கை வரலாற்றை1949லேயே தமிழர்களுக்குச் சொல்லுவதற்காக எழுதப்பட்டதாகும்.இப்புத்தகம்.குழந்தைகளுக்கும் அவசியம் வாங்கித் தர வேண்டிய புத்தகம்.” ரூ.15/-

மனிதக் கதை

பி.பி.சான்ஸ்கிரி பூமி எப்போது தோன்றியது,பூமியில் உயிர் எப்போது உருவானது,உயிர் என்றால் என்ன,உயிரினங்களின் வளர்ச்சி,குரங்கிலிருந்து மனிதன் உருமாறிய விதம்,மனித வாழ்க்கையின் பன்மைகள்,ஒற்றுமைகள்,கற்காலம்,மனித வாழ்க்கைக்கு தேவையான கருவிகளை தயார் செய்தல்,உணவு சேகரிப்பு,புதிய கற்காலம் மனித நாகரிக வளர்ச்சி,வர்க்க சமூகங்களின் துவக்கம் ஆகியவைகளைப் பற்றி ஆழமான அறிமுகம் எளிய தமிழில் படங்களுடன் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ரூ.120/-

எதிர்பாராத கண்டுபிடிப்புகள்

பேரா.சோ.மோகனா எல்லா கண்டுபிடிப்புகளுக்குப் பின்னும் ஏதோ ஓர் இரகசியம் இருக்கிறது.நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் எதிர்பாராமல் யாரோ கண்டுபிடித்ததுதான்.பல எதிர்பாராத கண்டுபிடிப்புகள் பற்றி நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நிரம்பிய புத்தகம் ரூ.25/-

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கட்டுரைகளும் உரைகளும்

ஈஸ்வர சந்தானமூர்த்தி,ஆர்.பெரியசாமி உலகமே வியந்த சார்பியல் தத்துவம் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ஐன்ஸ்டின்.இவர் வெறுமேன விஞ்ஞானி மட்டுமல்ல.மனிதர்களும்,விலங்குகளும் வாழுகிற இந்தச் சமூகத்தின் வழியே அறிவியலின் இடம் என்ன?என்பதை அறிந்து செயலாற்றியவர்.மனிதர்களின் வாழ்க்கைமுறையை சோசலிச நடைமுறையில்தான் மேம்படுத்த முடியும்.அதற்கான அறிவியலையும்.தத்துவத்தையும் இணைத்த ஐன்ஸ்டினின் கட்டுரைகளைக் கொண்ட நூல். ரூ.60/-

உலக பெண் விஞ்ஞானிகள்

ஆயிஷா இரா.நடராசன் “மற்ற துறைகளைப் போலவே விஞ்ஞானத் துறையிலும் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அளப்பரியது.ஆனால் பெண் விஞ்ஞானிகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.பெரும்பாலும் பெண் விஞ்ஞானிகளும் மிக சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.அந்த இருட்டடிப்பு செய்யப்பட்ட24பெண் விஞ்ஞானிகளைப் பற்றிய அறிமுகமே இந்நூல்.” ரூ.70/-

நவீன அறிவியலின் எழுச்சி

த.வி.வெங்கடேஸ்வரன் மின்னணு சாதனங்கள்,மின்காந்த கருவிகள்,அணுசக்தி,அணு தொழில்நுட்பம் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் அறிவியல் தளம் நவீன இயற்பியல் ஆகும்.இந்த நவீன இயற்பியல் பிறந்த கதையை சுருக்கமாக விவரிப்பதே இந்நூல் ரூ.70/-

புவியியலை புரிந்து கொள்வோம்

கேத்தரின் “பள்ளிக் கல்வியில் பல சுவையான இயல்கள் வேப்பங்காயாக மாறிவிடுகிறது.புவியியலும் அப்படிதான்.நமது இயல்பு வாழ்க்கையோடு பொருந்திய செய்திகள்தான் என்றாலும் பள்ளிப் பாடத்தில் இவை விளக்கும் விதம் மாணவரை விலகச் செய்துவிடுகிறது.புவியியல் செய்திகளை வெகு அழகாக,நேர்த்தியாக,எளிமையாக எல்லோரும் ருசிக்கும் விதமாக கேத்தரின் இந்நூலில் விளக்கி இருக்கிறார்.அழகு தமிழிலே ஆழமான செய்திகளை விளக்கும் திறமை இந்த நூலில் புலப்படுகிறது.அறிவியல் தமிழ் உலகம் பெற்றுள்ள புதுவரவு-கேத்தரின்.தமிழகத்தை குலுக்கிய சுனாமியில் துவங்கி புவியின் உள் அமைப்பை விளக்கி,சூரிய குடும்பத்தில் புவியின் இருப்பிடத்தை சுட்டி,புவியின் மீது கற்பனையாக தீட்டப்படும் அட்சரேகை,தீர்க்க ரேகையைக் கூறி புவியின் இடம்தோறும் காலம் வேறுபடும் என்பதை விளக்கியுள்ளார் கேத்தரின்.மேலும் காற்று,புயல்,மின்னல்,இடி போன்ற இயற்கை நிகழ்வுகளையும்,மண்,கனிவளம் முதலிய புவியியல் வளங்களையும் கூறியுள்ளார் இவர். “”பூமிக்குள் வெப்பம் மற்றும் அழுத்தம் அதிகரிக்கும்போது மாக்மா ஏதாவது ஒரு வழியில் வெளிவர முயல்கிறது. (நமது வீட்டு பிரஷர் குக்கர் மாதிரி)இதுவே எரிமலையாகிறது””என கேத்தரின் விளக்குவது அருமை.எளிமை நடைமுறை,இயல்பு வாழ்க்கை உவமைகள் வழியாக அறிவியலை விளக்குவது என்பது அறிவியல் பரப்புதலின் கோட்பாடு-அழகியல்.இந்த அழகியல் அருமையாக கேத்தரின் இந்த நூலில் எங்கும் காணக் கிடைக்கிறது.எனவேதான் இந்த நூலைப் படிக்கத் துவங்கினால் தொய்வு இன்றி வாசிக்க முடிகிறது. ‘வளம்’என்பதை பலரும் அரசியல் பார்வையில் பார்ப்பதில்லை.கேத்தரின் அவர்கள் வளம் என்பது என்ன என்பதை கேள்வி கேட்டு இன்று இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு வளர்ச்சி இன்றைய தொழில் வளர்ச்சியை சரியாக சாடுகிறார்.வேலைவாய்ப்புதான் இந்தியா போன்ற நாடுகளில் அடிப்படை வளர்ச்சி என்பதைச் சுட்டிக்காட்டும் அவர்””நாம் பயணம் செய்யும் பாதையை மாற்றிட வேண்டும்””எனவும் கூறுவது மெச்சத்தக்கது.த.வி.வெங்கடேஸ்வரன்” ரூ.30/-

உலக தொழில் நுட்ப முன்னோடிகள்

ஆயிஷா இரா.நடராசன் “உலகத்தொழில்நுட்ப முன்னோடிகள்” என்ற நூல் எழுத்தாளர் இரா.நடராசன் அவர்களால் எழுதப்பட்டு64பக்கங்களைக் கொண்ட12ஆளுமைகளைப் பற்றிய அற்புதமான நூல்.எல்லாப் பக்கங்களிலும் கூறப்பட்டுள்ள விவரங்கள் மாணவர் சமூகம் மட்டுமல்ல,விஞ்ஞானத் தொழில்நுட்பப் பயனாளிகள் கூட அறிந்து கொள்ளப்பட வேண்டியவைதான்.போர்டு என்கிற விஞ்ஞானியின் பெயரில் தார்சாலைகளில் ஓடுகின்ற கார் என்கிற வார்த்தைகள் சாலையைப் பற்றிய,கார் சக்கரமான டயர்பற்றிய,டயரின்தோல் பற்றிய புரிதல்களைப் பல நூற்றாண்டுகளில் எந்த எந்த நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடந்தன என்கிற வரலாற்றை(பக்- 6, 7)இரண்டு பக்கங்களில் ஆசிரியர் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.மேல்தட்டு மக்கள் மட்டுமே யோசிக்க முடியும் என்கிற நிலையிலிருந்து விவசாய மக்கள் வாங்கும் வகையில் போர்டு “கார்புரட்சி” நடத்தியுள்ளது சமூக முன்னேற்ற நடவடிக்கையாகும்.போர்டு எவ்வித புகழ்பெற்றாலும் எடிசனுக்கும் தனக்குள்ள உறவும் அற்புதமானது என்று போர்டு சொல்வது தோழமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். “சொல் உள்ளவர்கள் செல் உள்ளவர்களே” என்கிற வகையில் அதிநவீன புரட்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மொபைல் புரட்சியில் ஓர் அங்கமான மோட்டோ ரலா நிறுவனம் அதன் முதலீடு மற்றும் வீழ்ச்சி பற்றிய பொருளாதாரச் சிந்தனைகளை மாரட்டின் கூப்பர் என்கிற தலைப்பில் கொண்டு வந்துள்ளார்.அதிக எடை கொண்ட மொபைல்,ஒரு குறுகிய கால இடைவெளியில் எடை குறைவாய்க்கொண்டு வரப்பட்ட விஞ்ஞான முன்னேற்றம் ஆகியவை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் கூப்பர்தான் சூப்பர்மேன் என்பதை மொபைல் உபயோகிப்பாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.ஐப்பான் போரில் இருந்து மீண்டெழுந்த வரலாற்றின் நாயகன் ஆக்கியே மோரிடா என்பவரின் விபரமும் அவரது தளராத நடவடிக்கைகளும் நட்புக்கு அவர் தந்த மரியாதையும் போற்றப்பட வேண்டியவை. “பிஷீtவிணீவீறீ” என்கிற வசதியைப்பற்றிய வரலாறும்,ஸபீர் பாட்டியா என்பவரது விஞ்ஞான திலகத்திற்கு சிலை வைக்க வேண்டாம் காந்திக்குத்தான் சிலை வைக்க வேண்டும் என்று ஸபீர் கூறியிருப்பது அவரது அடக்கத்தை உணர்த்துகிறது.விஞ்ஞானி மார்கோனிதான் ரேடியோ என்பதைக் கண்டுபிடித்தார் என்கிற விவரத்தை(ஆனால் பொய்)உண்மைகள் மூலம் வாசிப்பவர்களுக்கு உணர்த்தியுள்ள ஆசிரியர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். 1895இல்(ஜெகதீசசந்திர போஸ்)கண்டுபிடித்த பிறகு1896இல் மார்கோனிக்கு உரிமை வழங்கியதை உணர்த்துகிறர்…

நிலவுக்குள் பயணம்

த.வி.வெங்கடேஸ்வரன் அந்த காலத்தில் மனிதர்கள் நிலவைக் கடவுளாகப் பார்த்தனர்.மேலும் நிலவைப்பற்றி பல புதிர்களும் கதைகளும் மக்களிடையே உலவின.நிலவுக்கு மனிதன் பயணமான பிறகு அதுவரை இருந்த கதைகள் எல்லாம் கட்டுடைந்தன.நிலவைப்பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கி கூறும் நூல். ரூ.110/-