தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?

பி.சீனீவாசராவ் 1947களில் தஞ்சை ஜில்லா விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிரசுதாரர்களும் அவர்களுடைய பத்திரிகைகளும் கூறுகின்றன.ஏன்? 1947களில் தஞ்சை ஜில்லாவில் நடந்தது என்ன?உண்மை விவரங்களை இந்நூல் விளக்குகிறது. ரூ.15/-

ஹரப்பா வேதங்களின் நாடா?

த.வி.வெங்டேஸ்வரன் வேதங்கள் பிறந்தது இந்தியாவில்தான்,ஆதிக் கலாசாரமான ஹரப்பா/மொஹஞ்சதரோ கலாசாரம் ஆரிய மரபுதான்,ஆரியார்கள் வெளியிலிருந்து வரவில்லை,இங்கிருந்துதான் வெளியே போனார்கள்.ராமபிரானும் அவருடைய சந்ததியினரும் இம்மண்ணின் மூதாதைகள் என்பது போன்ற ஏறளமான’வரலாற்று உண்மைகள்’எல்லாம் சங்பரிவாரங்கள் அவுத்து விடும் சரடு,திரித்து விடும் கயிறு,என்பதை வலுவான வரலாற்று மற்றும் மொழியியல் ஆதாரங்களோடு நிறுவும் இப்புத்தகம் ரூ.10/-

வரலாறு சமூகம் மற்றும் நில உறவுகள் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்

தமிழில்:அசோகன் முத்துசாமி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும்,தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கபட்டு அதிகாரத்திற்கு வந்த உலகின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முதலமைச்சர் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதிய15கட்டுரைகளின் செறிவான தமி ழக்கம் இப்பிரதி.பொருள் முதல் வாதம்.உற்பத்தி முறை வார்க்கப்போராட்டம். ரூ.160/-

அயோத்தியில் ராமன்

தமிழில்:கி.ரமேஷ ராமனின் பெயரால் ராம பக்தர்கள் எனக் கூறிக்கொண்டு இன்று ஏத்தகைய அக்கிரமங்கள் அரங்கேறிக் கொன்டுருகின்றன!வால்மீகி படைத்த உண்மையான ராமனுக்கும் இவர்கள் கீழ்ப்பிவிடுகிற ராமனுக்கும் இடையே எத்தனை எத்தனை வேறுபாடுகள்!கொல்கத்தவின் ஜதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னால் சமஸ்கிருததப் பேராசிரியர் சுகுமாரி பட்டசாரிஜி தனது ஆய்வு கட்டுரையில் இந்த வேறுபாடுகளை அலசுகிறார்.சோசியல் சயின்டிஸ்ட் இதழில் வெளியான கட்டுரை இது. ரூ.15/-

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி

லெனின் இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களில் லெனின்’ஏகாதிபத்தியம்’ஒரு குறிப்பிடத்தக்க நூல் ஆகும்.அதனுடைய சிறப்பு என்பது அது தொக்குத்தளிக்கும் தகவல்ளாலோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியும் உள்க யுத்தம் பற்றியும் அளிக்கும் சரியான விளக்கத்தாலோ அல்ல.இருபதாம் நூற்றாண்டின் எஞ்சிய பகுதிக்கான புரட்சிக்கர மாற்றுத்திட்டத்தை அளித்தத்தின் மூலம் மார்கசியத்தை மறுக்கட்டமைப்பு செய்வதற்கான உறுதியான வடிவமைப்பை அளித்திருந்தால் இந்நோல் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ரூ.140/-

உணவு நெருக்கடி வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்

ஏ.பாக்கியம் உணவு விலை பட்டியல் தயாரிக்கப்பட்ட1845-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலக மக்கள் இதுவாரி சந்தித்தது இல்லை. 2005முதல் உணவு தனியங்களின் விலை75சதவீதம் உயரிந்திருந்தாலும்,அரிசி உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் விலை150சதவீதம் உயர்ந்துள்ளது.இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்குள்2008-ஆம் ஆண்டு மட்டும்12.5கோடி மக்கள் தள்ளப்படடனர். 2007இல்84.8கோடியாக இருந்த பட்டினியளர்கள்2008-இல்92.3கோடியாக உயர்ந்தனர்.மேலும்100கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால்(undernurised people)பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் விளைவு உலகில் உணவுக்கான மோதல்கள்(Food wars)தீவிரமடைந்துள்ளன ரூ.10/-

இடதுசாரிகளும் புதிய உலகமும்

தமிழில்:அசோகன்முத்துசாமி புதிய தாராளமய உலகமாய யுகத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை சர்வதேசமய மாக்கப்ப்பட்டுவிட்டது.நுகர்வோர் பயன்படுத்தத் தயாராண ஒரு பொருளின் பாகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.அதற்கேற்றர் போல் முலதனம் எங்கு வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் போகிறது;வருகிறது.இப்போது முதலாளித்துவம் உண்மையில் கடும் நெருக்கடியில் சீக்ககிக் கொன்டுருக்கும் போதும் அது எப்பிடி தானை தக்கவைத்து கொன்டுருகிறது என்கிற கேள்வியை எழுப்பி;விடைகளையும் முன்வைக்கிறார்.முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் அதன் சுரண்டளையும்,அது உபரி மதிப்பை எப்பிடி அபகாரிக்கிறது என்பதையும் மார்க்கஸ் விரிவாக ஆராய்ந்தது போல,புதிய தாராளமய உலகமயம் பற்றிய ஒரு விரிவான,முழுமையான ஆய்வு தேவைப்படுகிறது என்கிறார் மார்த்தா ரூ.110/-

தெற்கும் வாழ்கிறது

தமிழில்:ஞாலன் சுப்பிரமணியன் நீ உரைத்த பொய்கள் ஏராளம்,உலகினைப் பற்றி என்னைப் பற்றி விளைவாக,என்னைப்பற்றிய படிமம் நீ திணித்த படிமம்:உன் சொற்களில்’வளர்ச்சி குன்றிய’ ‘திறன் குன்றிய..’அந்தப் படிவத்தை வெறுத்து ஒதுக்குகிறேன்…அது பொய்.இப்பொழுது,உன்னைத் தெரிந்து கொண்டேன்.பழைய புற்றுநோய் நீ.என்னையும் தெரிந்து கொண்டேன்!ஒரு நாள்,என் வெறும் கைமூட்டும் போதும் உன் உலகத்தைத் தூளாக்க எனவும் புரிந்து கொண்டேன்! ரூ.50/-

ஸ்தாபானத்தை பற்றி

ஸ்டாலின் வெற்றி தானாக வருவதிலை.அதை அடையவேண்டும்.சரியான அரசியல் வழியை உருவாக்கிய பிறகு ஸ்தாபான வேலையை வெற்றி தோல்வி அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிற தெளிவுடன் துவங்கும் புத்தகம்.வெறும் படிப்பினால் மட்டும் ஊழியர்கள் உருவாகிவிட மாட்டார்கள்.இடையூறுகளை எதிர்த்த போராட்டத்தில் தான் உண்மையாக ஊழியர்கள் உருவாகிரார்கள்.ஒரு சரியான அரசியல் கொள்கை செழிய படுத்த அதைத் தனது சொந்தக் கொள்கையாகக் கருதும்,அதை செழியப்படுத்தத் தயாராய் உள்ள,அதைச் செயல்படுத்தும் திறமையுள்ள அதில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய அதைச் பாதுகாத்து அதற்க்காக போரிடக்க்கூடியஊழியர்கள் வேண்டும். ரூ.15/-

புரட்சி இயக்கதின் தத்துவார்த வளர்ச்சி

சிவசர்மா இந்திய தேசம்முழுவதும் கொதித்தெழுந்து.விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிப் போராடிய அனுசீலன் சமிதி.யுகந்தார் குழு,கத்தார் இயக்கம்,இந்துஸ்தன் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியசன்(HSRA),சிட்ட்காங் போராளிகளின் இயக்கம் போன்றவை இளைஞர் கூட்டத்தால் வழிநடத்தப்பட்டவை. ரூ.20/-