ஃபீனிக்ஸ் அறிவியல் நாடகங்கள்

ஆயிஷா இரா.நடராசன் “இன்று அறிவியல் என்பது வெறும் ஆய்வகங்களில் இல்லை.அவை தேசங்களில் மக்களின் வரிப்பணத்தை முழுங்கித் கொண்டிருக்கும் அறிவியல் திட்டங்களாக உள்ளன.இந்த அரசியல் உள்ளிட்ட பல அறிவியல் நாடகங்களை இத்தொகுப்பு முன்வைக்கிறது.” ரூ.50/-

அறிவியல் முன்னோடி மேரி கியூரி

ஆர்.பெரியசாமி “மேரிகியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும்.அவர்,ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்;அவர் ஒரு ஏழைப்பெண்;அவர் வறுமை,தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார்.அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை சந்தித்தார்.அவரையே மணந்து கொண்டார்.அவர்களுடைய வாழ்க்கை ஈடு இணையற்றது.அவர்களின் வெறித்தனமான முயற்சிகளால்,மிக அதிசயமான கனிம மூலமான ரேடியத்தை கண்டுபிடித்தனர்.இந்தக் கண்டுபிடிப்பு,ஒரு புதிய அறிவியல் மற்றும் புதிய தத்துவத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்ததோடல்லாமல்,அது ஒரு கொடூர நோய்க்குரிய சிகிச்சைக்கான வழி முறைகளையும் மனித குலத்திற்கு அளித்தது.அறிவியல் உலகில் மிகச்சிறப்பான முதலிடங்களை சாதித்தவர்.அவர் தனது கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளராவார்.அது மட்டுமின்றி இயற்பியலில் கூட்டாக ஆராய்ச்சி செய்து கணவனுடன் இணைந்து நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணியும் அவரே.நோபல் பரிசின் வரலாற்றில்2பரிசுகளைப் பெற்ற முதல் அறிவியலாளரும் அவரே.” ரூ.50/-

கனவுகளின் விளக்கம்

சிக்மண்ட் ப்ராய்ட் தமிழில் : நாகூர் ரூமி நாம் காணும் கனவுகளைப் புரிந்து கொள்வதற்கு அறிவியல்பூர்வமான அடிப்படையைக் கண்டடைந்தவர் உலகப் புகழ்பெற்ற அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ‘கனவுகளின் விளக்கம்’ என்ற இவரது பிரசித்தி பெற்ற நூலின் சுருக்கமான வடிவம் இது.ஃப்ராய்ட் ஆய்வின் மூலம் கண்டறிந்து கூறும் விளக்கங்கள் உண்மையில் அதிர்வூட்டுபவை.கனவுகளை இப்படியெல்லாம் பகுத்து அறியமுடியுமா என்கிற வியப்பைத் தரும் பக்கங்களே இந்நூலில் அதிகம். ‘சைக்கோ அனலைசிஸ்’ என்னும் உளப்பகுப்பாய்வு முறையைப் பிரயோகித்து எழுதப்பட்டுள்ள இந்நூலை நாகூர் ரூமி தனது தேர்ந்த எளிய மொழி நடையால் வாசகப்புரிதலுக்கு இலகுவாக்குகிறார்.முற்றுப்புள்ளி என்றும் கடைசி அத்தியாயத்தில் அறிஞர் ஃப்ராய்டின் விளக்கங்களை விமர்சனத் தொனியில் நாகூர் ரூமி எழுதிப்பார்ப்பது சிறப்பு. ரூ.80/-

அக்னிச் சுடர்கள் அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்

அரவிந்த் குப்தா “சுமார்40இந்திய அறிவியலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றினைக் கொண்ட நூல்.ஒவ்வொரு ஆளுமையை வாசிக்கும் போதும் ஒரு உற்சாகம் கிடைக்கும்.அறிவியலின்பாலும் அறிவியலின் அடிப்படைகளின்பாலும் அவர்களை இழுக்கும்.கனவுகள் விரியும்,நம்பிக்கை வலுப்படும்.சாதனைகள் பல புரிய தெம்பும்,தெளிவும்,உற்சாகமும் பிறக்கும்” ரூ.160/-

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

ஆயிஷா இரா.நடராசன் மேகநாத் சாஹா,டி.டி.கோசாம்பி,சர்.சி.வி.ராமன்,ஜி.டி.நாயுடு உட்பட்ட பல ஆளுமைகளின் அறியப்படாத வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டி,ஏன் இந்த நிலை என்பதற்கான அரசியல்,சமூக காரணங்களையும் தொட்டுக் காட்டுகின்றார். ரூ.30/-

கடவுள் பிறந்த கதை

எஸ்.ஏ.பெருமாள் கடவுளுக்கு எதிரான போராட்டம் என்பது கடவுள் பிறந்த கதையை மதங்கள் பிறந்த கதையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்தான் துவங்குகிறது என்பார்கள்.அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துள்ள புத்தகம் இது.பிடிபடாத மர்மங்களோடு இருந்த இயற்கையின் சக்திகளை சில மந்திரங்களின் மூலம் சில சடங்குகள் மூலம் கட்டுப்படுத்த முயன்ற மனித நடவடிக்கையே ஆரம்ப கால நம்பிக்கையாக இருந்தது.நம்மோடு கூட இருந்து மரணத்தினால் காணாமல் போகிற மனிதர்கள் ஆவி ரூபத்தில் நம்மோடு இருப்பதான மனத் தேறுதலை அடிப்படையாகக் கொண்டு ஆவி வழிபாடு தோன்றியது.மக்கட்பேற்றைத் தரும் ஆண் பெண் குறிகளை வழிபடும் போக்கும் முன்னோரை வழிபடும் போக்கும் தம் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் உதவியாக இருக்கும் அல்லது இடைஞ்சலாக இருக்கும் விலங்குகளை பாம்புகளை வழிபடும் போக்கும் என மெல்ல மெல்ல வழிபாடுகள் வளர்ந்த கதை சுவையான உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ளன.பல கடவுள்களுக்கு பதிலாக ஒரு கடவுளை ஆதிக்க வர்க்கம் கொண்டுவந்து மதங்களை நிறுவி மக்களின் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்கும் கதையும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.மதமென்னும் மதமதப்பிலிருந்து மீண்டால்தான் துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என புத்தகம் முடிகிறது ரூ.15/-

குஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட கோரவடிவங்கள்

ரானா அயூப் 2010ஆம் ஆண்டு, அன்றைக்கு ‘தெஹல்கா’ (Tehelka) இதழில் பணியாற்றிய பத்திரிகையாளராகிய ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகை புலனாய்வுப் பணியை தன் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்டார். 2001ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளாகப் பணி புரிந்தவர்கள், 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பிறகு அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து மனம் திறந்து பேசியதை ரகசியமாக பதிவு செய்துள்ளார். குஜராத் அரசின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் அரசு இயந்திரமும் எவ்வாறு ஒரு சமூகப் படுகொலை நடைபெற காரணமாகவும், மௌன சாட்சியமாகவும் இருந்தனர் என்பதை அவர்களது வாக்கு மூலங்களாகவே கொண்டுவந்தார். அரசியல் காரணங்களால் அவரது நிறுவனம் அவரது பதிவுகளை பதிப்பிக்க மறுத்த நிலையில், ‘Gujarat files’ – குஜராத் கோப்புகள் என்ற பெயரில் தானே சொந்தமாக பதிப்பித்துள்ளார். நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘குஜராத் கோப்புகள்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலய வெளியீடாக… ரூ.170/-

தேர்தல் களம்

  1. வேளாண்சமூகத்தை புறக்கணித்த திமுக – அதிமுக 87-88 ல் விதை, உரம், பூச்சிமருந்து, வாடகை, கூலி ஆகிய உற்பத்திச் செலவை அடிப்படையாக வைத்து தற்போது விலை தீர்மானிக்கப்படுகிறது. இதை விட விவசாயிகளுக்கு வேறு துரோகம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வேளாண்மைத்துறையின் பங்கு 2001-02ம் ஆண்டில் 17.54 சதவீதமாக இருந்தது 2009-10ல் 8.78 சதவீதமாகவும் 2014-15ல் 7.25 ஆகவும் குறைந்துள்ளது… 50 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ள தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசு ஆண்டுக்கு ஐந்தாயிரத்து 500 கோடி அளவுக்குத்தான் விவசாயிகளுக்கு கடன் வழங்க ஒதுக்கினார்கள். இதனால் வங்கிகளில் கடன் பெற முடியாமல், தனியாரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை’ என்ற துயர முடிவை எட்டினர். கரும்பு அனுப்பிய 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில் 15 சதவீத வட்டியுடன் பாக்கியைத் தர வேண்டுமென்று சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் கரும்பையும் கொடுத்துவிட்டு காசுக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் விவசாயிகள் தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும் அதை நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் வழங்க இருப்பதாகவும் 2006 சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க வாக்குறுதியளித்தது. அடுத்த சில மாதங்களில் வழக்கம் போல், பின்வாங்கி 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இல்லை என கையை விரித்தார் கருணாநிதி… ஆண்டுக்கு சராசரியாக 70 நாட்கள் மட்டுமே விவசாயத்தில் வேலை கிடைக்கிறது. மீதி நாட்களுக்கு? விவசாயத்தில் கிடைக்கும் வேலையை மட்டுமே நம்பி எந்தவொரு விவசாயத் தொழிலாளியும் வாழ முடியாது என்பது இன்று ஏற்பட்டிருக்கும் புதிய நிலைமை. கடந்த 48 ஆண்டு காலமாக மாறி, மாறி திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்களித்தோம். மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லை. ஆண்டவர்களின் வாழ்வில் தான் வசந்தம் வீசியது. மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவ்வளவு காலமும் வலுவான மாற்று அணி என்பது உருவாகவில்லை. இப்போது உருவாகியுள்ள வலுவான மாற்று அணியை…

இடது திருப்பம் எளிதல்ல

ச.சுப்பாராவ் தெற்காசியாவின் சமகால வரலாறு குறித்த ஆய்வில் சர்வதேச அளவில் பெயர்பெற்ற கல்விப்புல ஆளுமையான விஜய் பிரசாத்2014பொதுத் தேர்தலுக்கு பின்னராக இந்திய இடதுசாரிகளின் நிலை குறித்து விவரிக்கும் முக்கியமான நூல். “ஒரு கட்சியின் வரலாற்றை எழுதுவதை,ஒரு நாட்டின் பொதுவான வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் எழுதுவதாகச் சொல்லலாம்” எனும் அந்தோனியோ கிராம்சியின் சொற்றொடரை எடுத்தாளும் விஜய் பிரசாத்,அதற்கொப்ப இடதுசாரிகளின் இன்றைய நிலையை இந்திய நாட்டின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திக் காட்டுகின்றார்.கம்யூனிசம் பலமுறை தோற்கடிக்கப்படலாம்.பலமுறை தவறான வழியில் சென்றுவிடலாம்.ஆனால் போராட்டத்தின் மூலமாக சுய விமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது புதிய பலம் பெற்று,விஸ்வரூபமாக மீண்டும் எழும்.என்பார் கார்ல் மார்க்ஸ். “இப்படி நடந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் எனது சார்பு இருக்கிறது.இதில் பாரபட்சமற்ற தன்மை என்ற பாசாங்கு கிடையாது.ஆனால் இது எதார்த்தத்தை ஒட்டியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன்” எனக் கூறும் விஜய் பிரசாத் என்மீதும் பிறர் மீதும் எனக்கு ஒரேவிதமாக இரக்கம்தான் என்று கூறி,இரக்கமற்ற துல்லியத்துடன் இடதுசாரிகளின் நிலையை,அவர்கள் வந்த பாதையை,சந்தித்த சவால்களை,அவற்றை எதிர்கொண்டவிதத்தை எல்லாம் வரலாற்றுப் பின்புலத்துடன் ஆய்வுக்கு உட்படுத்துகின்றார். ரூ.260/-

நேரு கொள்கையும் நடைமுறையும்

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நேருவின் கொள்கைகள் நடைமுறை பற்றி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்துக்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் இ.எம்.எஸ்.இந்நூலில் ஆய்வு செய்கிறார். ரூ.140/-