ஆடும் குதிரை

ரூ.140/- சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலகச் செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது.

பதினான்காவது அறை

ரூ.120/- அச்சங்களின் அழகைக் கண்டறிந்த ஒரே ஒரு திரைப்பட கலைஞர் ஹிட்ச்காக் தான். மர்மத் திரைப்படம் எடுப்பது மட்டுமல்லாது அச்சம் தரும் திகில் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதையும் தன் கலைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் செய்தார். அவ்வாறு அவர் தேர்ந்தெடுத்த சிறந்த ஏழு துப்பறியும் கதைகளின் தமிழாக்கம்தான் இத்தொகுப்பு. ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த கதைகள் துப்பறியும் மர்மக் கதை வாசகர்களுக்கு ஒரு வரம்போல் இன்றும் நிலைத்திருக்கின்றன.

கனவுகளுடன் பகடையாடுபவர்

ரூ.140/- நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது. அண்மைக் காலத்தில் முக்கிய மொழியாக்கக் கலைஞராகக் கவனம் பெற்றுவரும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வெர், இளம்தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த கெவின் பிராக்மைர், அமெரிக்க நவீன எழுத்தின் பிதாமகர் டோபியாஸ் உல்ஃப், நைஜீரிய எழுத்தாளர் சீமமாண்டா அடீச்சி ஆகியோரின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கலகம் செய்யும் இடது கை

ரூ.90/- வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்.

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

ரூ.800/- கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.

ஜெயமோகன் சிறுகதைகள்

ரூ.460/- எர்ணாகுளம் அருகே தங்கியிருந்தபோது தினமும் காலையில் கடலோரம் நடக்கச் செல்வேன். பரிசுத்தமான கடற்கரை. முந்தைய- நாள் மழைபெய்த மணற்பரப்பு. அலைநாக்கின் ஈரம் படிந்து படிந்து குமிழியிட்டு வற்றிக்கொண்டிருந்த பரப்பில் காலைச்செம்மை.

பூமணி சிறுகதைகள்

ரூ.400/- எழுபதுகளின் ஆற்றல்மிக்க சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான பூமணி தனது கதைகளின் வழியே கரிசல் வாழ்வை அதன் முழுமைகளோடு கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. இருப்புக்கான போராட்டங்கள் கரிசல் வாழ்வைச் சவாலான ஒன்றாக மாற்றியிருந்த காலகட்டத்தைச் சேர்ந்த பூமணியின் கதைகளை அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கான முனைப்புகளைப் பற்றிய ஒரு கலைஞனின் தேடல் எனவும் சொல்லலாம். நமது பழங்கதை மரபின் ஆதாரமான வலுக்களை இழக்காமல் தனக்கான படைப்புமொழியைக் கண்டடைந்தவை இக்கதைகள்.

கடவுள் கற்ற பாடம்

ரூ. 90/- இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்பொழுது உண்மையில் பிரஞ்சு இலக்கியத்தின் மீது ஒரு பெருங்காதல் தோன்றுகிறது. புதிர்களும் அர்த்தங்களும் மாறி மாறித் தோன்றும் ஒரு கனவின் கிளர்ச்சித் தன்மையைத் தந்துவிடுகிறது இதன் ஒவ்வொரு கதையும். தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளர்களின் படைப்புத்திறனும் மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பு நேர்த்தியும் இணைந்தே செல்லும் தண்டவாளம்போல நம்மைப் புதிய புதிய தூரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. ‘கடவுள் கற்ற பாடம்’ கடவுளுக்கான பாடமேதான்.

அழகிய பெரியவன் கதைகள்

ரூ.500/- அழகிய பெரியவனின் அரசியல் நம்பிக்கையும் கலை நம்பிக்கையும் ஒன்றோடொன்று முயங்கி, ஒன்றுக்கொன்று அனுசரணையாக அமைந்திருக்கும் ஒரு பெறுமதியான உறவில் இவருடைய கதைகள் உருவாகியிருக்கின்றன. கதையுலகின் உள்ளார்ந்த தீவிரத்திலும் கதையாடலின் உயரிய கலை எழுச்சியிலும் உயிர்கொண்டிருக்கும் கதைகள் இவை. நம் மண்டையோட்டைப் பிளக்கும் கதை உலகமானது, படைப்பு மந்திரத்தின் கதகதப்பில் உருப்பெற்றிருக்கிறது.  இன்றைய தமிழ்க்கதைப் பரப்பில் அழகிய பெரியவன் தனித்துவமும் ஆற்றலும் கூடிய ஒரு சக்தி. தன் காலத்தோடும் வரலாற்றோடும் தன் கலை மொழியினூடாக அழகிய பெரியவன் வலுவான, தீர்க்கமான உறவு கொண்டிருப்பதன் அடையாளம் இத்தொகுப்பு. – சி. மோகன்