சங்க கால சாதி அரசியல்

சங்க கால சாதி அரசியல் கௌதம சித்தார்த்தன் தமிழின் தொன்மையான சங்ககால சாதி சமூகத்தின் வாழ்வியலை ஆய்வு செய்யும் பெரும்பான்மையான ஆய்வாளர்கள், பெரும்பாலும் அச்சு வடிவம் சார்ந்த நூல்களின் ஆவணங்களையோ, அரசு சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டுக்கள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், கைபீதுகள், ஆங்காங்கு வாய்மொழியாகக் கேட்டு பதிவு செய்யப்பட்ட மேலைநாட்டாரின் குறிப்புகள், சங்ககால இலக்கிய உரையாசிரியர்கள் அள்ளிவிட்ட கருத்துப் பெட்டகங்கள்… போன்ற அச்சு வடிவம் பெற்ற ஆவணங்களை மாத்திரமே கணக்கில் எடுத்துக் கொண்டுதரவுகளை முன்வைக்கும் போக்குதான் இன்றளவிலும் கைக்கொள்ளப்படுகிறது. இது ஒருவிதமான ஆய்வு அரசியல். பண்டைய விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்களைக் கணக்கில் கொள்ளாமல் ஆய்வை முன்வைப்பதென்பது முழுமையடைந்ததாக இருக்காது. விளிம்புநிலையாளர்களின் வாழ்வியலை நுட்பமாகத் தேடுவதும் நுண்ணுணர்வுடன் ஆய்வு செய்வதும் இன்றைய பின்காலனியச் சூழலில் மிகமிக முக்கியமான ஒன்று. ரூ.80/-

காடுகளுக்காக ஒரு போராட்டம்

சிக்கோ மென்டிஸ் நில்லுங்கள்! போதும்! கொலைகள் போதும். அழிவும் துன்பமும், வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள், சுற்றுச்சூழல் நாசங்கள் போதும். நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம்; அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம். சிக்கோ மென்டிசின் உயிர்த்தியாகம் வீண்போக கூடாது. அமேசானின் மழைக்காடுகளைக் காக்க அவர் போராடினார். எல்லாக் காடுகளையும், காட்டுயிர்களையும் காக்க நாம் போராடுவோம். ரூ.120/-

கடவுள் கற்பனையே

புரட்சிகர மனித வரலாறு ஏ.எஸ்.கே ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ரூ.90/-

ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே !

நலங்கிள்ளி கல்வித் துடிப்பிருந்தும் தெளிவில்லாது தடுமாறும் தமிழ்ப் பெற்றோர் – கல்விக் கொள்கையா கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் அரசினர் அதிகார வர்க்கத்தினர் – துறைதோறும் துறைதோறும் தாழ்வுற்று வறுமை மிஞ்சிய தமிழகத்தை மீட்டுயர்த்தப் போராடும் தமிழ்த் தேசியர்கள் – சாண் ஏறினால் முழம் சறுக்குவது ஏனென்று தெரியாமல் திகைப்புறும் சமூகநீதிக்காரர்கள் – மதிப்புக்குரிய ஆசிரியப் பெருமக்கள் – மாண்பமைக் கல்வியாளர்கள்… அத்தனைப் பேரும் இந்நூலைக் கசடறக் கற்றுத் தெளிந்தால் கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை மீளக் காண்பதற்குத் தத்தமக்குரிய பங்களிப்புச் செய்யலாம். எளிய தமிழ்வழிக் கல்விப் பற்றாளராக எனக்கு அறிமுக-மாகி, இந்நூலில் சமூகநீதிக் கல்வியாளராக மலர்ச்சி பெற்றுள்ள தோழர் நலங்கிள்ளியிடமிருந்து தமிழ்ச் சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது. அடியேனும் கூட. ரூ.60/-  

எழில் மரம்

ஜேம்ஸ் டூலி தமிழில் : லியோ ஜோசப் பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம்  பழைய ஹைதராபாத் நகரின்  சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட  சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்  அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய முடியுமா என்று விடைக் காணப் புறாப்பட்டார். அதன் கதை ‘எழில்  மரம்’ என்ற கவித்துவம் நிறைந்த இந்த நூலில் சொல்லப்படுகிறது. ஆக்கபூர்வமான முடிவுகள் தரும் டூலியின் பயணங்கள் பற்றிய கதை அது. ஆப்ப்பிரிக்காவின் குடிசைப்பகுதிகள் முதல் சீனாவின் கன்சு மலைச் சரிவுகள் வரை அவருடைய பய்ணம் நீண்டது. குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர்கள், புதிய முனைப்புடையோர் முதலியோரின் கதை இது. ரூ.360/-  

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்

கௌதம சித்தார்த்தன் புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.இயக்குனருக்குத்தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத்திரிப்புகள் நுட்பமாக கதையின் சட்டகங்களுக்குள் மறைந்து உட்கார்ந்து கொள்ளும். ரூ.120/-

இழக்காதே!

பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் செல்லமுத்து குப்புசாமி பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது. ரூ.250/-

ஆரியக்கூத்து

ஆசிரியர்: அ.மார்க்ஸ் கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சமவெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்கைளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது. ரூ.70/-  

அறிவியல் வளர்ச்சி வன்முறை

  கிளாட் ஆல்வாரஸ் தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன் ”வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான விதியைப்போல மாற்றவே முடியாத ஒன்றாகவும் வைத்துக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பார்வை நம்மைத் தவறாக வழிபடுத்தும் ஒன்றாகும். வளர்ச்சி என்பது கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் வைக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயராகவும் பெரிய வன்முறையாகவும் அழிவை நோக்கி நம்மைச் செலுத்தும் கருவியாகவும் இருக்கிறதென்று என்னால் வாதாடமுடியும். ரூ.200/-  

அவரை வாசு என்றே அழைக்கலாம்

இந்தியாவின் நொறுக்கப்பட்ட இதயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள  சுப்ரன்ஷு சௌத்ரி ஏழு ஆண்டுகளை சதீஸ்கரில் உள்ள நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளுடன் கழித்துள்ளார் . இந்த உணர்ச்சிகரமான தேடலில் வேட்டையாடப்பட்ட ஆண்களிடமும் பெண்களிடமும் மிக உன்னிப்பாக, வரிசையாக எல்லா நிலைகளிலும் கேள்விகள் கேட்டு புலனாய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார் . இந்த அசாதாரண புத்தகத்தின் மையப்புள்ளியாக உள்ள  “வாசு” ஒரே நேரத்தில்  தோழராகவும், புரட்சியாளனாகவும், நண்பனாகவும், அந்நியனாகவும் இருந்துள்ளார்.  இதுவரை மாவோயிஸ்ட்டுகளைப் பற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒரே மாதிரியான தவறான பிம்பத்தை  சுப்ரன்ஷு சௌத்ரி  வாசு போன்ற மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து  பெறப்பட்ட உண்மைக்  கதைகள் மற்றும் தரவுகளின் மூலம்  மாற்றியமைக்கிறார். இதுவே இந்நூலை சமீப காலத்தில் வெளிவந்த  மாவோயிஸ்ட்டுகளின் வரலாற்றைப் பற்றி பேசக்கூடிய  மிகவும் விரிவான, பாகுபாடற்ற, நேர்மையான ஆவணமாக மாற்றுகிறது. ரூ.180/-