பதவிக்காக

சுஜாதா இந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது. ரூ.300/-

நிலா நிழல்

சுஜாதா குடும்பம், கிரிக்கெட்,கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் முகுந்தனைக் கொண்டு செலுத்தும் ஆதார உணர்ச்சி எது? சுஜாதாவின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான நிலா நிழல், குழந்தைப் பருவத்தை இழந்து இளமையை அடையும் காலத்தின் வேட்கையையும் கனவையும் கவித்துவத்துடன் வரைந்து செல்கிறது. ரூ.115/-

எப்போதும் பெண்

சுஜாதா இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன். பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள். ரூ.140/-

சுவை, மணம், நிறம்

  உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களைப் பற்றியது இந்தக் கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்தக் கதை பதிவு செய்கிறது. மதிப்பீடுகள் குலைந்து போன ஒரு சமூகத்தை இந்தக் கதை பிரதிபலிக்க முயல்கிறது. பிரக்ஞையின் அரசியலை முன்னிறுத்துகிறது இந்தக் கதை. ரூ.150/-

கானல் வரி

தமிழ் நதி தன் வாழ்வனுபவத்தின் ஊடாகக் காதல் என்கிற பிணைப்பு பற்றிய பல புரிதல்களோடும், கருத்துகளோடும், தன்நண்பர்களின் அனுபவப் பகிர்தல்கள் ஏற்படுத்திய சிந்தனைகளோடும் – ஊடகங்கள், இலக்கியப் பதிவுகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்களோடும் – இவை அனைத்தின் கூட்டுணர்வுகள் ஏற்படுத்திய தளத்தில் நின்று நிகழ்காலம், நிகழ் உலகக் காதல், காதல் கொண்ட மனிதர்கள், காதலின் பகைப்புலன்கள் பற்றிய தன் சிந்தனைகளைக் கதையாகப் படைத்திருக்கிறார் தமிழ்நதி. அதனாலேயே பல பரிமாணங்களில் இக்கதையின் வாசிப்புத் தளமும் வெளியும் விரிவடைகிறது. அதுவே இந்த நாவலை அடர்த்தி பெறவும் வைத்திருக்கிறது. பிரபஞ்சன் முன்னுரையிலிருந்து. ரூ.50/-

யாமம்

எஸ். ராமகிருஷ்ணன் எண்ணற்ற உள்மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புதத்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழைத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்நாவல் எதார்த்தம், புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது. ரூ.320/-

கள்ளி

வா.மு. கோமு வா.மு. கோமுவின் எழுத்துகள் குதூக்கலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்க்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வும் மதிப்பீடு களும் கனவுகளும் வெகு இயல்பாகத் தோற்றம் கொள்கின்றன. மத்திய தரக் கலாச்சார மதிப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, தமிழ் வாழ்வின் அறியப்படாத எதார்த்தம் ஒன்றினை வா.மு.கோமு சித்தரிக்கிறார். இந்த எதார்த்தம் சில நேரம் அதிர்ச்சி அளிப்பது; சில நேரம் நம் அந்தரங்க முகத்தைத் திறந்து காட்டுவது; ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது. ரூ.120/-

மரம்

ஜீ. முருகன் ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்லஎன்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன. ரூ.140/-

ஜீ.சௌந்தரராஜனின் கதை

எஸ். செந்தில் குமார் வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளும் லட்சியங்களும் கனவுகளும் தனி மனிதனிடம் வந்தடையும்போது அவற்றிற்கு எதிரான வாழ்வைத்தான் வாழ வேண்டியதாக இருக்கிறது. ஒருவரது வாழ்வில் நிழலைப் போலத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயல்பானவையும் இயலாமையும் ஜீ.சௌந்தரராஜனின் கதையில் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களது நிழல்களை மறைத்துக் கொண்டுதான் ஜீ. சௌந்தரராஜனின் கதையின் கதாபாத்திரங்கள் வீதிகளிலும் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரூ.90/-

வார்ஸாவில் ஒரு கடவுள்

தமிழவன் இந்த நாவல் போலந்து நாட்டின் தலைநகர் வார்ஸாவைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் ஒரு தமிழனின் பார்வையில் அமைகிறது. ஐரோப்பியக் கலாச்சாரத்திற்குள் ஒரு கிழக்கத்தியக் கலாச்சார முகமிருப்பதையும் இந்தக் கலாச்சாரத்தின் விவரிக்க முடியாத புதிர்களையும் இந்நாவல் எளிய, புதுமையான கதையமைப்பின் மூலம் முன்வைக்கிறது. ரூ.275/-