சுஜாதாவின் குறுநாவல்கள் 1

சுஜாதா இந்த முதல் தொகுதியில் இடம்பெறும் குறுநாவல்களில் பெரும்பாலானவை குற்றம், பிறழ்வு, மனித நடத்தையின் விசித்திரத்தோடு தொடர்புடையவை. அவை குற்றங்களின் மனோரீதியான ஊற்றுகளைத் தேடிச் செல்பவை. மனிதர்களின் பிறழ்வுகளை அவர்களின் அந்தரங்க மற்றும் சமூக வாழ்வின் பின்புலத்தில் வைத்துப் பார்க்க முயல்பவை. தம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்கள் வழியே செலுத்தப்படும் மனிதர்களின் செயல்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவை. இந்தக் குற்றங்களுக்குப் பின்னே இருக்கும் காரணங்கள் எளிமையானவை. பாலியல் சார்ந்த பிறழ்வுகள், அந்தரங்க ஆசைகளுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், மனித மனதின் அடியாழத்தில் நீக்கமுடியாத குற்ற வேட்கை, எல்லா உறவுகளுக்குள்ளும் காத்திருக்கும் துரோகத்தின் நிழல், ஆளுமைச் சிதைவுகளை உருவாக்கும் புறச்சூழல்கள், நவீன வாழ்க்கை முறையின் விசித்திரங்கள், குழப்பங்கள், நிராசைகள், பேராசைகள், இயலாமைகள் என இவை அனைத்தும் எந்த ஒரு எளிய சாதாரண மனிதனையும் எந்தக் கணத்திலும் குற்றம் என்ற எல்லைக்குள் கொண்டு செலுத்தக்கூடியவை என்பதையே இந்தக் குறுநாவல்கள் பேசுகின்றன. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் யாரும் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்லர். இக்கதைகளில் குற்றங்களுக்குப் பலியாகிறவர்கள் போலவே அந்தக் குற்றங்களை இழைப்பவர்களும் வாழ்வின் துர்க்கனவுகளுக்குப் பலியானவர்களே. ரூ.380/-

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகன் இத்தொகுதியில் உள்ள குறுநாவல்கள் சிறுகதைக்குரிய வேகமான கதையோட்டத்துடன் நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் கொண்டவை. இக்கதைகள் விதவிதமான நிலக்காட்சிகளின் வழியாக வேறுபட்ட வாழ்க்கைகளைக் கண்டபடி பயணம் செய்யும் அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை தொகுப்புகளில் சேர்க்கப்படாத குறுநாவல்கள் பல உள்ள முழுமையான தொகுப்பு இது. ரூ.180/-

வேருலகு

மெலிஞ்சி முத்தன் மெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை, யுத்தம் உருவாக்கிய மனிதனை பற்றிய உண்மையான வெளிப்பாடு.- எஸ். ராமகிருஷ்ணன். ரூ.40/-

அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது

வ.ஐ.ச.ஜெயபாலன் இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை. ரூ.100/-

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி

சுஜாதா சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொகுதிகளாக கடந்த ஆண்டு பதிப்பித்தது. அந்த வரிசையில் அவரது குறுநாவல்களின் மூன்றாவது தொகுதி இது. இந்தத் தொகுதியில் கணேஷ் – வசந்த் இடம்பெறும் குறுநாவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழில் துப்பறியும் கதைகள் அல்லது குற்றம் சார்ந்த கதைகளின் இயல்பில் பெரும் மாறுதல்களைக் கொண்டுவந்தவர் சுஜாதா. குற்றங்களின் உளவியல் ரீதியான பின்புலங்கள் தர்க்க ரீதியான, அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த அணுகுமுறை ஆகியவை அவரது துப்பறியும் கதைகளை தனித்துவம் உள்ளதாக்குகின்றன. அந்தக் குற்றக்கதைகளில் இடம் பெறும் துல்லியமான பின்புலம் சார்ந்த விவரணைகளும் பாத்திர உருவாக்கமும் சம்பவங்களின் யூகிக்க முடியாத நூதனமான திருப்பங்களும் இந்தக் கதைகளை மர்மக்கதைகள் என்கிற எல்லையைத் தாண்டி முக்கியத்துவம் பெறச்செய்கின்றன. ரூ.500/-

மரகதத் தீவு

  காஞ்சனா தாமோதரன் காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள், மொழிகள் என எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பால் மனித உணர்வுகளும் உறவுகளின் ஆதாரமான நிறங்களும் ஒன்றே என்பதை இக்கதைகள் வசீகரத்துடன் பதிவுசெய்கின்றன. ரூ.100/-

சுஜாதாவின் குறுநாவல்கள் (கணேஷ்-வசந்த்)-நான்காம் தொகுதி

சுஜாதா சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை. இந்த அம்சமே சுஜாதாவின் துப்பறியும் கதாபாத்திரங்களை பிற சாகச கதாபாத்திரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை. இதன் காரணமாகவே கணேஷ்-வசந்த் வாசகர்களின் மனதில் இவ்வளவு நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றத்தோடும் வன்முறையோடும் கொண்டிருக்கும் உறவைவிட, மனித இயல்புகள் சார்ந்து வெளிப்படுத்தும் நுட்பங்களே அதிகமானவை. சுஜாதாவின் அங்கதம் மிகுந்த நடை அதன் உச்சங்களைத் தொடுவது கணேஷ்-வசந்த் கதைகளிலேயே என்பதற்கு இந்தக் குறுநாவல் தொகுதியும் ஒரு உதாரணம். சுஜாதாவின் எழுத்து நடையைப்போலவே கணேஷ் -வசந்த் கதாபாத்திரங்களும் முதுமை அடைவதே இல்லை. ரூ.300/-

வெள்ளாவி

விமல் குழந்தைவேல் நீண்ட நெடுந்தொலைவு போய் புலம்பெயரியாய் ஐக்கிய இராச்சியத்தில் வதியும் விமலின் ஆன்மா இரவுக்காட்சி படம் பார்த்துவிட்டு சாறனை தூக்கிக் கட்டியபடியும் கோவில் சுவர்களில் குந்தியிருந்து ஊர்ப்புதினங்களைப் பேசியும், எழுவட்டுவான் மைதானத்தில் உதைபந்து விளையாட்டுக்குப் பிறகான மிகுமாலை அமைதியில் இஞ்சிப் பிளோன்டியொன்றின் உசாரில் காலை நீட்டி உட்கார்ந்து வியர்வை காய்ந்து பனிபெய்து நனைக்கும் வரைக்கும் பகிடி பேசிச் சிரித்தாயும், கோளாவில் மணல் தெருக்களில் சைக்கிளையும், துயரம் நொறுக்கும் வாழ்வையும் தள்ளியபடியும் இழந்த வாழ்வின் சாரங்களை இன்றும் சுவைத்துக் கொண்டிருக்கின்றது. இறந்த வாழ்வின் மகோன்னதத் தருணங்களை, திரும்பவொருத்தரம் நமக்கு வாய்க்க வைத்திருக்கிறார் விமல். ரூ.125/-

பாபுஜியின் மரணம்

நிஜந்தன் மனிதனின் சமூக,உளவியல் தெளிவையும், தெளிவின்மையையும் ஒரு வளைகோட்டில் காட்டுகிறது இந்த நாவல். கோட்டின் ஏற்ற இறக்கங்கள் பாத்திரங்களின் நிறங்களை மாற்றிக் காட்டுகின்றன. எப்போதும் நிறம் இழக்கும் சமூகத்தை எதிர்கொள்ளும் நிறமற்ற மனிதனின் சிக்கல்களை இந்த நாவல் சாத்தியப்படுத்துகிறது. சொற்கள் ஆக்கப்படாத மனப் புதைவுகளை வாழ்வின் முடிவில் வெளிப்படுத்தும் மனிதப் போக்கை பதிவு செய்கிறது இந்த நாவல். ரூ.120/-

பெண் இயந்திரம்

சுஜாதா நவீனயுகப் பெண்களை, அவர்களின் துயரங்களை, சவால்களை, துல்லியமாகச் சித்தரித்த படைப்பாளிகளில் சுஜாதாவின் இடம் முக்கியமானது. அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாடகங்களிலும் – இந்த பாத்திரங்கள் பெண்ணின் புதிய அடையாளத்தை, சக்தியை தீர்க்கமாக வெளிப்படுத்துவதைக் காணலாம். பெண்களின் மீது படியும் வேதனைகளையும் குற்ற நிழல்களையும் அவர் மிகுந்த பரிவுடனும் மிகையின்றியும் சித்தரிப்பதற்கு மற்றொரு உதாரணம் பெண் இயந்திரம். சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு புதிய பதிப்பாக இந்த நாவல் வெளிவரும் சந்தர்ப்பத்தில் நம் காலத்தின் மகத்தான கலைஞனின் வெற்றிடம் நம்மை அழுத்துகிறது. ரூ.90/-