காஃபிர்களின் கதைகள்

கீரனூர் ஜாகிர் ராஜா இந்தியாவைப் போன்ற கொந்தளிப்பான தேசத்தில் இதைப் போல நூறு தொகுப்புகள் வரவேண்டிய அவசியம் இருக்கிறது. ரூ.160/-

கனவினைப் பின் தொடர்ந்து…

தா.வெ. பத்மா தமிழில் : ஜே. ஷாஜஹான் இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயன்றுள்ளேன். ரூ.100/-

எருது : உலக மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

மொழியாக்கம் : கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்டிராதவர்களையும் பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கும் மனிதர்களின் படைப்புகளையும் முன்வைத்து உரையாடுகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள். ரூ.120/-

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

வா.மு. கோமு இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரூ.100/-

கம்பாநதி

ரூ.90/- நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.

நாளைக்கும் வரும் கிளிகள்

ரூ.140/- பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர். தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது. இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை.

ஆடும் குதிரை

ரூ.140/- சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் உலகச் செவ்விலக்கியச் சிறுகதைத் தொகுதி இது.

பதினான்காவது அறை

ரூ.120/- அச்சங்களின் அழகைக் கண்டறிந்த ஒரே ஒரு திரைப்பட கலைஞர் ஹிட்ச்காக் தான். மர்மத் திரைப்படம் எடுப்பது மட்டுமல்லாது அச்சம் தரும் திகில் கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதையும் தன் கலைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் செய்தார். அவ்வாறு அவர் தேர்ந்தெடுத்த சிறந்த ஏழு துப்பறியும் கதைகளின் தமிழாக்கம்தான் இத்தொகுப்பு. ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த கதைகள் துப்பறியும் மர்மக் கதை வாசகர்களுக்கு ஒரு வரம்போல் இன்றும் நிலைத்திருக்கின்றன.

கனவுகளுடன் பகடையாடுபவர்

ரூ.140/- நற்றிணை பதிப்பகத்தின் உலக இலக்கிய மொழியாக்கத் திட்டத்தின் கீழ் வெளிவரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இது. அண்மைக் காலத்தில் முக்கிய மொழியாக்கக் கலைஞராகக் கவனம் பெற்றுவரும் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில், உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வெர், இளம்தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த கெவின் பிராக்மைர், அமெரிக்க நவீன எழுத்தின் பிதாமகர் டோபியாஸ் உல்ஃப், நைஜீரிய எழுத்தாளர் சீமமாண்டா அடீச்சி ஆகியோரின் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கலகம் செய்யும் இடது கை

ரூ.90/- வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்.