இரவு பகலான கதை

ஆயிஷா இரா.நடராசன் “ஆதி உலகம் இருள்மயமானது.கற்களுரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான்.பொங்கும் புகையுடன் தீப்பந்தம்,மெழுகுவர்த்தி,அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்.இந்த வரலாற்றை எளிய அத்தியாயப் பிரிப்புகளுடன் சுவாரசியம் மிக்க மொழி நடையில் கதை போல விவரித்துச் செல்லும் இரா.நடராசன்,வாசர்களுக்கு இருளைக் காட்டி வெளிச்சப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.” ரூ.45/-

மரபியல்

ஆயிஷா இரா.நடராசன் “அறிவியலின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிற மனித இனத்தின் மிகப்பெரிய மருத்துவ சவால்களுக்கு விடைகாணுகின்ற மரபியலின்100க்கு100தகவல்கள்.மரபியல் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.” ரூ.30/-

நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

ஆயிஷா இரா.நடராசன் “இதுவரை யாரும் அணுகாத ஒரு பார்வையில் அறிவியலின் வரலாற்றை தனக்கே உரிய நக்கலும்,நகைப்புணர்வும் கலந்த நடையில் எழுதிச் செல்லும் ஆயிஷா நடராசன் ஆயிரக்கணக்கான தகவலுடன் இம்முறை களமிறங்கி இருக்கிறார்.அப்புறம் என்ன அள்ள அள்ள அறிவியல்.” ரூ.80/-

100க்கு100அறிவியல் நேனோ தொழில்நுட்பம்

ஆயிஷா இரா.நடராசன் “ஒரு குண்டூசி முனைக்குள் முழு பிரிட்டானியா களைக்களஞ்சியத்தையே அடக்கியது ஒரு தொடக்கமே.முழு உலகையே ஒரு முற்றுப் புள்ளிக்குள் கொண்டு வர துடிக்கும் நேனோ தொழில் நுட்பம் குறித்த100க்கு100தகவல்கள்.நேனோ தொழில்நுட்பம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விடை காண்கிறது இந்நூல்.” ரூ.30/-

புரட்சியில் பகுத்தறிவு

ப.கு.ராஜன் “இந்நூல் தத்துவம்,அறிவியல்,அரசியல் ஆகிய மூன்று துறைகளில் தொடக்கம் முதல் இன்று வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கை முழுமையாக ஆராய்ந்து ஒரு தெளிவான மார்க்சியப் பார்வையை முன்வைக்கிறது.” ரூ.545/-

ஹிக்ஸ்போஸான் வரை(இயற்பியலின் கதை)

ஆயிஷா இரா.நடராசன் “இயற்கை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்ந்து அறியதே இயற்பியல்.இயற்பியலின் வரலாறை தொடக்கம் முதல் சமகாலம் வரை ஆயிஷா இரா.நடராசன் வாசகர்களுக்கு உவப்பான ஒருவித மொழி நடையில் புதினம் போல விவரித்து செல்லும் பாங்கு அலாதியானது.இயற்பியலின் எண்ணற்ற புதிர்களையும் ரகசியங்களையும் வரலாற்றின் அடிப்படையில் தகுந்த சான்றாதாரங்களுடன் விவரித்து செல்கிறது இந்நூல்.” ரூ.100/-

கிரகணங்களின் நிழல் விளையாட்டு

த.வி.வெங்கடேஸ்வரன் “ஜோதிடர்களுக்கும் பழமைவாதிகளுக்கும் கிரகணம் என்பது அபசகுனம்,கெட்ட காலம் என கூறுவதில் உண்மையில்லை என்பதை அறிவியல் ரீதியில் விளக்குகிறது இந்நூல்.கிரகணம் இயல்பிலிருந்து வேறுபட்டது.நிலவின் வளர்பிறை தேய்பிறை போல காலவரிசை முறையில் அவ்வப்போது ஏற்படுவது அல்ல.குறிப்பிட்ட இடத்தில் முழு சூரிய கிரகணம் சுமார்360வருடத்திற்கு ஒருமுறைதான் காட்சி தரும்.அவ்வளவு அரிதான காட்சி.இன்று வினாடி தவறாமல் கிரகணத்தைமுன் கூட்டியே கணிக்க முடியும்.கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு விளக்கமும் உள்ளது.கிரகணத்தின்போது அறிவியல் ரீதியாகக் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.கிரகணங்களைப்பற்றிய முழுவிளக்கத்தை தருகிறது இந்நூல்.” ரூ.40/-

விண்மீன்களின் வகை வடிவம் வரலாறு

த.வி.வெங்கடேஸ்வரன் தமிழில் வானியல் பற்றி விரிவான அளவில் எளிமையாக வரும் முதல் நூல்.கோள்கள் பற்றி அவற்றின் அமைப்பு,இயக்கம்,வரலாறு பற்றி இதில் தெளிவாக சொல்லப்படுகிறது-.சில செய்முறைகளும் தரப்பட்டுள்ளன.இந்நூல் பிரபஞ்சம் பற்றிய மறை திறவுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ரூ.160/-

கண்டோம் கடவுள் துகளை

த.வி.வெங்கடேஸ்வரன் ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை எப்படி செய்தார்கள்? ஹிக்ஸ் போஸான் என்பது என்ன? ஸ்டாண்டர்ட் மாடல் என்பது என்ன? இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை கடவுள் துகள் என கூறுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் தருவது தான் இச்சிறுநூல். ரூ.40/-

எனது நீலப் புவி கோளம்

ஹெர்மன் தித்தோவ் “இந்நூலில் சோவியத் விண்வெளிப் பயணி ஹெர்மன் ஸ்தெபானவிச் தித்தோவ் தம் பிள்ளைப் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் உள்ளங்கவரும் விதத்தில் வருணிக்கிறார்.மேலும் தனது விண்வெளிப் பயண அனுபவத்தை பகிர்கிறார். ……..“கிளம்புக!’’குப்பென்று எரிந்த நெருப்பு,பழுப்புப் புகைப் படலங்கள்,தீப்புயல்,இவற்றோடு இடி போன்ற தடதடப்பு ஸ்தெப்பி வெளி நெடுகிலும் அதிர்ந்து ஒலித்தது.வெள்ளி நிற ராக்கெட்டு பனி அடர்களை உதறிப் போக்கி விட்டு,விருப்பம் இல்லாதது போல மெதுவாகச் செலுத்து மேடையை விட்டுக் கிளம்பியது.பூமிச் சிறையின் தளைகளை அறுப்பதற்கு ராக்கெட்டு இயந்திரங்களின் பல பத்து லட்சம் குதிரைத் திறன் கடுமையாக முயன்று பாடுபட்டதை ராக்கெட்டின் இடிமுழக்கத்தால் தரையோடு தரையாக நசுக்கப்பட்டிருந்த நாங்கள் அனேகமாக உடல்களால் உணர்ந்தோம்!……. “ ரூ.160/-