Description
சுவாமி ஓங்காரானந்தர்
கீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட பழைமையான குறள் கருத்துகளும், தர்மத்தின்படி நடக்கும் வாழ்க்கைக்கான அறநெறியை மையமாகக் கொண்டவை. பகவத் கீதையைத் தந்த கண்ணன் இறைவனாக வணங்கப்படுகிறார். குறள் தந்த வள்ளுவர் திருவள்ளுவ நாயனாராகப் போற்றி வணங்கப்படுகிறார். கீதை _ கடவுள் மனிதனுக்குச் சொன்னது; குறள் _ மனிதன் மனிதனுக்குச் சொன்னது… _ இப்படி சில கருத்துகள் இந்த இரண்டு நூல்களையும் நம் இரு அறிவுப் பொக்கிஷங்களாகக் காணும் நோக்கை அளித்துள்ளன. சுவாமி ஓங்காரானந்தர் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் நல்ல புலமை பெற்றவர். தன்னுடைய எளிமையான சொற்பொழிவுகள் மூலம் மக்களிடம் நல்ல கருத்துகளைப் பரப்பி வருகிறார். முன்னோர் அறிவுச் செல்வங்களை, அடுத்த தலைமுறை உள்ளங்களில் ஆழமாகப் பதியவைக்கும் வல்லமை சுவாமி ஓங்காரானந்தருக்கு உண்டு. அவர் திருக்குறளையும் பகவத் கீதையையும் ஒப்பிட்டு பல ஆன்மிக அரங்குகளில் தன் வலுவான கருத்துகளால் இளையோர் உள்ளங்களை வசீகரித்துள்ளார். இந்த நூலில் திருக்குறள், பகவத் கீதை விளக்கங்
ரூ.55/-
Reviews
There are no reviews yet.