Description
ஸ்வாமி
இன்றளவும் உள்ள, உலகின் பழைமையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான நம்மிடம், நம் முன்னோர் கொடுத்துச் சென்றுள்ள இலக்கியப் பொக்கிஷங்கள் அளவற்றவை. நம்மை நல்வழிப்படுத்த உருவகக் கதைகள், பெரியோர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகியன இன்று பரவலாக இருப்பதுபோல், அந்தக் காலத்தில் எழுந்தவையே புராணங்களும் இதிகாசங்களும். காலச் சூழலுக்கு ஏற்ப அவற்றில் மக்களின் வாழ்க்கை முறைகளும், பழக்க வழக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். விஞ்ஞான அறிவு பெற்றுள்ள இன்றைய சூழலில், அந்தப் புராணங்களில் பெரும்பாலானவற்றை அப்படியே ஏற்க நமக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் அவை காட்டும் நீதியை நம்மால் தள்ளிவிட முடியாது. அக்கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகள். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் நம் நாட்டில் தோன்றியனவாயினும், கிழக்கத்திய சிந்தனைகளில் தோய்ந்த நாடுகளில், குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகள், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இவை இரண்டின் தாக்கம் சற்றே அதிகம்! அங்கெல்லாம், அந்தந்த நாடுகளின் சூழலுக்கு ஏற்ப இவ்விரு இதிகாசங்களும் மாற்றம் பெற்று செல்வாக்குடன் திகழ்கின்றன. பெரியவர்கள், தங்கள் பி
ரூ.55/-
Reviews
There are no reviews yet.