Description
கே.குமார சிவாச்சாரியார்
கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே _ என்று, பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசித்தார். பெரும்பாலான ஆன்மிகப் பேச்சாளர்களும் இதையே விரிவாக எடுத்துரைத்து, ‘‘பலனை எதிர்பார்க்காத தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்வதுண்டு. ஆனால், அன்றாட வாழ்க்கையில் உழலும் சாமானியர்கள், எந்தவித பலனும் கிடைக்காமல் ஒரு செயலைச் செய்ய முடியுமா என்ன? விரும்புவது கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பழங்காலம் முதலே, பூஜைகளும் பரிகாரங்களும் செய்து, வரம் என்னும் பலனைப் பெற்று வருகிறார்கள். சங்கல்பம் என்ற தீர்மானத்தை ஒவ்வொரு பூஜையின் தொடக்கத்திலும் சொல்லி, “… இந்த பலனை உத்தேசித்து, இந்த பூஜையைச் செய்கிறேன்…” என்று பிரார்த்திப்பது வழக்கம். அந்த வகையில், மழலைச் செல்வம் வேண்டுமா? சந்தான கணேசர் வழிபாடு உள்ளது; திருமணம் கைகூட வேண்டுமா? சுயம்வரா பார்வதி வேள்வி உள்ளது; கடன் தொல்லை நீங்க வேண்டுமா? ருண மோசன பூஜை உள்ளது; உடல்நலம் நன்றாகி, ஆயுள் அதிகரிக்க வேண்டுமா? இருக்கவே இருக்கிறது _ இப்படி ஒவ்வொரு பலனையும் உத்தேசித்து நாம் வேண்டிச் செய்யும் 21 பூஜைகளையும், செய்யும் முறைகளையும், எளிய மந்திரங்களையும், அவற்
ரூ.65/-
Reviews
There are no reviews yet.