Description
குள.சண்முக சுந்தரம்
தமிழக கிராமங்களில் வாழும் மக்கள், தெய்வங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சமூகத்தினரும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கும் அதைக் கொண்டாடுவதற்கும் ஒவ்வொருவிதமான சடங்குகளை, சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து வழிபட்டு வருகின்றனர். சிறு ஊர்களையும் பெரும் நகரங்களையும் சேர்த்து ஒரு நாடாக நம் முன்னோர் வகுத்தனர். ஒவ்வொரு நாட்டுக்கும் பழக்கவழக்கங்கள் மாறுபடும்; தெய்வங்கள் வேறுபடும். தெய்வங்கள், தங்களின் குறைகளைத் தீர்ப்பதாகவும், உயிர்களைக் காப்பதாகவும் மக்கள் நம்புகிறார்கள். சொந்த பந்தங்கள், ஆடு மாடுகள், கோழி குஞ்சுகள் போன்ற உயிர்களைக் காக்கவும், விளைச்சல் பெருகவும் வேண்டுதல் நடத்தி பூஜை போட்டு திருவிழா நடத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். அது இப்போதும் பல கிராமங்களிலும் நடைமுறையில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஊர்களில் உள்ள எல்லை சாமிகளைத் தேடி, நேரில் சென்று கிடாவெட்டு, பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் தல வரலாற்றையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் குள.சண்முகசுந்தரம். சக்தி விகடன் இதழில் தொடராக வெளிவரும
ரூ.70/-
Reviews
There are no reviews yet.