Description
டாக்டர் ஷாலினி
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்!’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த நூலைப் படித்தபிறகு தங்கள் கருத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வார்கள்! இதேபோல, ‘ஆண்தான் மேலானவன், பெண் தாழ்ந்தவள்’ என்றும் பல கதைகள் ஆதிகாலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகின்றன. ஏன் இப்படி இத்தனைக் கதைகளைக் கட்டியிருக்கிறார்கள்? பெண்ணைக் குறைத்து மதிப்பிடும் இத்தகைய கதைகள், நிச்சயம் பெண்களால் உருவாக்கியிருக்க முடியாது. இந்த அத்தனைக் கதைகளும், ஆண்களின் வசதிக்காக ஆணாதிக்க சமுதாயம் கட்டிவிட்ட வெறும் கதைகளே என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கிறபோது உணரமுடியும். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ _ கடந்த நூற்றாண்டில் சார்லஸ் டார்வின் தொடங்கி வைத்த இந்த ‘ஆண்_பெண் அரசியல்’ விவாதத்தை _ தமிழ்நாட்டில் பெரியார் கையிலெடுத்துப் போராடி வந்த விவாதத்தை _ இப்போது டாக்டர் ஷாலினி இந்தப் புத்தகத்தில் மீண்டும் தொடர்கிறார். பெண் எப்படி அடிமையாக்கப்ப
ரூ.140/-
Reviews
There are no reviews yet.