Description
கேபிள் சங்கர்
கேபிள் ஆப்பரேட்டர், திரைப்பட விநியோகஸ்தர், திரையரங்கு நடத்தியவர், ப்ளாகர், திரைப்பட விமர்சகர், நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என பன்முகம் கொண்டவர். இவரது பல சிறுகதைகள் குறும்படங்களாய் எடுக்கப்பட்டு பரிசு பெற்றிருக்கிறது. கலகலப்பு, ஈகோ போன்ற படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறார். லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் என்ற சிறுகதைத் தொகுப்பில் ஆரம்பித்த இவரது எழுத்துப் பயணத்தில் இது ஒன்பதாவது நூலாகும். கேபிளின் கதை எனும் புத்தகம் இந்திய கேபிள் வியாபாரம் பற்றி தமிழில் எழுதப்பட்ட ஒரே புத்தகம். அதே போல சினிமா வியாபாரம் என்கிற நூல் தமிழ்த் திரையுலகின் விநியோகம் பற்றிய ஒரே நூல் என்றே சொல்லலாம். தற்போது தொட்டால் தொடரும் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
ரூ.70/-
Reviews
There are no reviews yet.